"அதிமுக எங்க பங்காளி.. ஆனா பாஜக பகையாளி” கூட்டணி கிடையாது - போட்டுத்தாக்கிய ஆர்.எஸ்.பாரதி!
தேனி: அதிமுக எங்கள் பங்காளி, எங்களுக்குள் எப்போதும் சண்டை போட்டுக் கொள்வோம். ஆனால் பாஜக எங்கள் பகையாளி என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார்.
தேனி மாவட்டம் போடியில் நடைபெற்ற தி.மு.க அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசினார்.
மேலும், தி.மு.க பா.ஜ.கவுடன் இனி எப்போதும் சேராது என ஆர்.எஸ்.பாரதி எம்.பி உறுதியாகப் பேசியுள்ளார்.

சாதனை விளக்க கூட்டம்
ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று தேனி மாவட்டம் போடியில் நடைபெற்றது. தி.மு.க வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய ஆர்.எஸ்.பாரதி தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனையை விளக்க வேண்டும் என்றால் இருக்கின்ற நேரம் போதாது. தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றபோது தமிழக அரசு ஐந்தே முக்கால் லட்சம் கோடி கடனில் இருந்தது. ஆனால் அவரது நிர்வாகத் திறமையால் கடனை சமாளித்து வருவதோடு, மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் எனத் தெரிவித்தார்.
Recommended Video

ஜெயலலிதாவை விட
மேலும் பேசிய அவர், இது பெண்களுக்கான ஆட்சி. பெண்களின் முன்னேற்றம், கல்வி வளர்ச்சிக்காக செயல்படும் தி.மு.க ஆட்சியை பாராட்டி வடமாநிலங்களில் உள்ள ஊடகங்கள் எல்லாம் பேசுகின்றன.
ஸ்டாலின் முதலமைச்சராக வந்ததும் எதிர்க்கட்சிகளை எல்லாம் பழிவாங்குவார் என எல்லோரும் சொன்னார்கள். ஆனால் யாரும் பழிவாங்கப்படவில்லை. ஜெயலலிதாவை விட எடப்பாடி பழனிசாமியை மரியாதையாக நடத்தியது ஸ்டாலின் தான். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ் போன்றோர் முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சனம் செய்கின்றனர்.

அதிமுக பங்காளி
தமிழகத்தில் அ.தி.மு.க எங்கள் பங்காளி கட்சி. எங்களுக்குள் எப்போதும் சண்டை போட்டுக் கொள்வோம். ஆனால் பா.ஜ.க எங்கள் பகையாளி கட்சி. ஒரு போதும் தி.மு.க பா.ஜ.கவுடன் சேராது.
கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க அரசு நிறைவேற்றி வருகிறது. ஆனால் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஏன் வழங்கவில்லை என பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க கேட்பதற்கு தகுதி கிடையாது. அரசு ஊழியர்களை பாதுகாக்கும் இயக்கமாக தி.மு.க எப்போதும் இருக்கும் என்றார்.

பழிவாங்க அவசியமில்லை
மெரினாவில் கலைஞருக்கு சமாதி கட்ட இடம் கொடுக்க மறுத்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் தி.மு.கவினரின் சட்டப் போராட்டத்தால் வெற்றி கிடைத்தது. முதலமைச்சரான பிறகு ஸ்டாலின் நினைத்திருந்தால் ஜெயலலிதா பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்பை ரத்து செய்திருக்க முடியும். ஆனால் ஸ்டாலின் அவ்வாறு செய்யவில்லை. எங்களுக்கு யாரையும் பழிவாங்க வேண்டிய அவசியமில்லை எனப் பேசினார்.
-
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி












Click it and Unblock the Notifications