கிளாஸ்ரூமில் மது குடிக்கும் மாணவிகள்! திமுகவால் சமுதாய சீரழிவு! தேனியில் கொந்தளித்த ஓ.பன்னீர்செல்வம்

Subscribe to Oneindia Tamil

தேனி : திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் வகுப்பறையிலேயே மாணவ மாணவிகள் மது அருந்தும் அளவுக்கு சமுதாய சீரழிவு ஏற்பட்டுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு பேருந்தில் பயணம் செய்த மாணவிகள் மது அருந்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வகுப்பறையில் மாணவ மாணவிகள் குளிர்பானத்தில் மது கலந்து குடிக்கும் காட்சிகள் வெளியான நிலையில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

திமுக ஆட்சி

திமுக ஆட்சி

இந்நிலையில் திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் வகுப்பறையிலேயே மாணவ மாணவிகள் மது அருந்தும் அளவுக்கு சமுதாய சீரழிவு ஏற்பட்டுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். தேனி மாவட்டத்தில் பெரியகுளம் அருகே தனது பண்ணை இல்லத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல் அமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.

ஓ.பன்னீர் செல்வம்

ஓ.பன்னீர் செல்வம்

ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளிடையே பேசிய அவர், அதிமுக அரசு கொண்டு வந்த மக்கள் நல திட்டங்களை அளிக்கும் நோக்கில் திமுக செயல்பட்டு வருவதாகவும், அதிமுக ஆட்சிக் கொண்டு வந்த தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், அம்மா மினி கிளினிக், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்பட்டு வந்த 2,500 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை நிறுத்தியதைப் போல தற்போது அம்மா ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தையும் நிறுத்தி உள்ளதாகக் குற்றம்சாட்டினார்.

திட்டங்கள் முடக்கம்

திட்டங்கள் முடக்கம்

அதிமுக ஆட்சியில் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்ற பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை திமுக அரசு முடக்கி வருவதாக குற்றம் சாட்டி அவர் உள்ளாட்சித் தேர்தல் முடிந்தவுடன் தமிழகத்தில் சொத்து வரி உயர்வை அறிவித்து மக்களை திமுக அரசு அதிர்ச்சிக்குள்ளாக்கியது எனக் கூறினார். தற்போதைய சூழலில் தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் அதிமுக மற்றும் திமுக தலைமையிலான அரசின் மீது கடும் கோபத்தில் உள்ளனர் எனக் கூறிய அவர் இது குறித்து சட்டமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பும் போதெல்லாம் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் பல்வேறு காரணங்களை கூறி தவிர்த்து வருகிறார்.

சமுதாய சீரழிவு

சமுதாய சீரழிவு

ஆனால் சொத்து வரி விதிப்பை திரும்பப் பெறும்வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும். திமுக தலைமையிலான ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. தமிழகத்தில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது வகுப்பறையில் அமர்ந்து மாணவர்கள் மற்றும் மாணவிகள் மது குடிக்கும் அளவுக்கு தமிழகத்தில் சமுதாய சீரழிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் இதைப்பற்றியெல்லாம் திமுக தலைமையிலான அரசு கண்டுகொண்டதாக தெரியவில்லை" என கடுமையான விமர்சனங்களை அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் முன்வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+