"50 கிலோ"..தேர்தல் நாள் அதுவுமா.. தேனியில் என்னவெல்லாம் கொடுக்குறாங்க பாருங்க! பறக்கும் படை ஆக்சன்!
தேனி: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுக்க தேர்தல் ஆணையம் சார்பாக போலீசார் மற்றும் அதிகாரிகள் குவிக்கப்பட்டு உள்ளனர். தேனியிலும் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் தமிழ்நாட்டில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. காலை 7 மணியில் இருந்து வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.
கொரோனா காலம் என்பதால் வாக்காளர்களுக்கு வெப்பநிலை சோதனை செய்யப்பட்டு, வாக்களித்த பின் சானிடைசர் கொடுக்கப்படுகிறது. எல்லா வாக்குச்சாவடியில் காவலர்கள் அதிக அளவில் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

சிசிடிவி
இதில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் ஆணையத்தின் மைக்ரோ அப்சர்வர் என்ற அதிகாரிகள் களமிறக்கப்பட்டு உள்ளனர். பிரச்சனை ஏற்பட உள்ள வாக்குசாவடிகளில் இவர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு முழுக்க எல்லா வாக்குசாவடியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மாவட்ட தலைநகரில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகம் மூலம் இந்த சிசிடிவி கேமரா காட்சிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கண்காணிப்பு
அதேபோல் தேர்தல் நேரத்தில் பண, பொருள் விநியோகம் செய்யப்படுகிறதா என்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள், போலீசார் சோதனை செய்து வருகின்றனர். இதற்காக 1 லட்சம் போலீசார், 10 ஆயிரத்திற்கும் அதிகமான நிர்வாகிகள், அதிகாரிகள் களமிறக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் தேனியில் உத்தமபாளையில் வாக்காளர்களுக்கு கொடுக்க பதுக்கி வைக்கப்பட்டு இருந்த இறைச்சி பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இறைச்சி
வாக்காளர்களுக்கு லஞ்சமாக அரை கிலோ இறைச்சி வழங்கும் வகையில் பொட்டலம் பொட்டலமாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. ஆளும் திமுக தரப்பினர் இப்படி இறைச்சியை பதுக்கி வைத்துள்ளதாக தேனி மாவட்ட அதிக புகார் வைத்துள்ளது. இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் பறக்கும்படையினர் உத்தமபாளையத்தில் இறைச்சி பதுக்கி வைக்கப்பட்டு இருந்த பகுதியில் ரெய்டு நடத்தினர். பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி தேர்தல் அதிகாரி மல்லிகாவிடம் அளிக்கப்பட்டது. இந்த இறைச்சியின் அளவு மொத்தம் 50 கிலோ இருக்கும் என்று கூறப்படுகிறது.
Recommended Video


என்ன பிளான்
உத்தமபாளையத்தில் உள்ள வார்டுகளில் இந்த இறைச்சியை மக்களுக்கு வீடு வீடாக விநியோகிக்க திமுக திட்டமிட்டு இருந்ததாக தேனி மாவட்ட அதிமுக புகார் வைத்துள்ளது. இதையடுத்தே பறக்கும் படையினர் அதிரடி சோதனை செய்து இறைச்சிகளை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.ஆனால் திமுக நிர்வாகிகள் யாரும் இறைச்சி விநியோகம் செய்யவில்லை, இதற்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் தேனி மாவட்ட திமுக தரப்பு விளக்கம் அளித்துள்ளது. சரியாக தேர்தல் நாள் அதிகாலையில் தேனியில் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications