Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"50 கிலோ"..தேர்தல் நாள் அதுவுமா.. தேனியில் என்னவெல்லாம் கொடுக்குறாங்க பாருங்க! பறக்கும் படை ஆக்சன்!

Subscribe to Oneindia Tamil

தேனி: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுக்க தேர்தல் ஆணையம் சார்பாக போலீசார் மற்றும் அதிகாரிகள் குவிக்கப்பட்டு உள்ளனர். தேனியிலும் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் தமிழ்நாட்டில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. காலை 7 மணியில் இருந்து வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.

கொரோனா காலம் என்பதால் வாக்காளர்களுக்கு வெப்பநிலை சோதனை செய்யப்பட்டு, வாக்களித்த பின் சானிடைசர் கொடுக்கப்படுகிறது. எல்லா வாக்குச்சாவடியில் காவலர்கள் அதிக அளவில் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

 சிசிடிவி

சிசிடிவி

இதில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் ஆணையத்தின் மைக்ரோ அப்சர்வர் என்ற அதிகாரிகள் களமிறக்கப்பட்டு உள்ளனர். பிரச்சனை ஏற்பட உள்ள வாக்குசாவடிகளில் இவர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு முழுக்க எல்லா வாக்குசாவடியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மாவட்ட தலைநகரில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகம் மூலம் இந்த சிசிடிவி கேமரா காட்சிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கண்காணிப்பு

கண்காணிப்பு

அதேபோல் தேர்தல் நேரத்தில் பண, பொருள் விநியோகம் செய்யப்படுகிறதா என்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள், போலீசார் சோதனை செய்து வருகின்றனர். இதற்காக 1 லட்சம் போலீசார், 10 ஆயிரத்திற்கும் அதிகமான நிர்வாகிகள், அதிகாரிகள் களமிறக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் தேனியில் உத்தமபாளையில் வாக்காளர்களுக்கு கொடுக்க பதுக்கி வைக்கப்பட்டு இருந்த இறைச்சி பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இறைச்சி

இறைச்சி

வாக்காளர்களுக்கு லஞ்சமாக அரை கிலோ இறைச்சி வழங்கும் வகையில் பொட்டலம் பொட்டலமாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. ஆளும் திமுக தரப்பினர் இப்படி இறைச்சியை பதுக்கி வைத்துள்ளதாக தேனி மாவட்ட அதிக புகார் வைத்துள்ளது. இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் பறக்கும்படையினர் உத்தமபாளையத்தில் இறைச்சி பதுக்கி வைக்கப்பட்டு இருந்த பகுதியில் ரெய்டு நடத்தினர். பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி தேர்தல் அதிகாரி மல்லிகாவிடம் அளிக்கப்பட்டது. இந்த இறைச்சியின் அளவு மொத்தம் 50 கிலோ இருக்கும் என்று கூறப்படுகிறது.

Recommended Video

    முத்தமிழ் கவியே With Anandhan Epi 01 | Vairamuthu’s Mazhai Kuruvi Explanation | OneIndia Tamil
    என்ன பிளான்

    என்ன பிளான்

    உத்தமபாளையத்தில் உள்ள வார்டுகளில் இந்த இறைச்சியை மக்களுக்கு வீடு வீடாக விநியோகிக்க திமுக திட்டமிட்டு இருந்ததாக தேனி மாவட்ட அதிமுக புகார் வைத்துள்ளது. இதையடுத்தே பறக்கும் படையினர் அதிரடி சோதனை செய்து இறைச்சிகளை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.ஆனால் திமுக நிர்வாகிகள் யாரும் இறைச்சி விநியோகம் செய்யவில்லை, இதற்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் தேனி மாவட்ட திமுக தரப்பு விளக்கம் அளித்துள்ளது. சரியாக தேர்தல் நாள் அதிகாலையில் தேனியில் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+