மிரட்டும் கோடைக்காலம்.. கூடங்குளத்தில் மின் உற்பத்தி பாதிப்பு.. மின்வெட்டு அபாயத்தால் மக்கள் பீதி.!?
திருநெல்வேலி : கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இரண்டாவது அணு உலையில் பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிகளுக்காக 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், கோடைக்காலத்தில் மின் வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு நிதி உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
அங்குள்ள இரு அணு உலைகள் மூலம் இதன் மூலம் 2 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்படுகிறது.

கூடங்குளம் அணுமின் நிலையம்
இதனைத்தொடர்ந்து 3 மற்றும் 4வது அணு உலைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இதன் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில் அணு உலைகள் அமைப்பதற்கான இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. 3 மற்றும் 4வது அணு உலையில் இருந்து வருகிற 2023ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மின் உற்பத்தியை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

மின்னுற்பத்தி நிறுத்தம்
இந்நிலையில் ரூ.49,625 கோடி மதிப்பில் 5 மற்றும் 6வது அணு உலைகள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2020 மற்றும் 2021ஆம் செப்டம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் பராமரிப்பு பணிக்காக 2வது அணுஉலையில் மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டது. பராமரிப்பு பணிகள் முடிந்து அதே மாதம் 26ஆம் தேதி மாலை மீண்டும் மின்னுற்பத்தி தொடங்கியது.

பராமரிப்பு பணிகள்
இதற்கிடையே இன்று முதல் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2வது உலையில் அதிகாலை பராமரிப்பு பணிக்காக மீண்டும் மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது . இதனால் 1000 மெகாவாட் மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிகள் சுமார் 8 வாரங்களுக்கு நடைபெறம் என்றும், பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர் மின் உற்பத்தி தொடங்கும் என அணு மின் நிலைய நிர்வாகத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

மின் தடை அபாயம்
தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே கடும் வெயில் கொளுத்தி வருகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் கடும் வெயில் காரணமாக மக்கள் அவதி அடைந்துள்ளனர் அவ்வப்போது ஏற்படும் மின்தடையும் சிக்கலை மேலும் ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இரண்டாவது உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி மின் தடை அபாயத்தை மேலும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications