மிரட்டும் கோடைக்காலம்.. கூடங்குளத்தில் மின் உற்பத்தி பாதிப்பு.. மின்வெட்டு அபாயத்தால் மக்கள் பீதி.!?
திருநெல்வேலி : கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இரண்டாவது அணு உலையில் பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிகளுக்காக 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், கோடைக்காலத்தில் மின் வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு நிதி உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
அங்குள்ள இரு அணு உலைகள் மூலம் இதன் மூலம் 2 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்படுகிறது.

கூடங்குளம் அணுமின் நிலையம்
இதனைத்தொடர்ந்து 3 மற்றும் 4வது அணு உலைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இதன் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில் அணு உலைகள் அமைப்பதற்கான இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. 3 மற்றும் 4வது அணு உலையில் இருந்து வருகிற 2023ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மின் உற்பத்தியை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

மின்னுற்பத்தி நிறுத்தம்
இந்நிலையில் ரூ.49,625 கோடி மதிப்பில் 5 மற்றும் 6வது அணு உலைகள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2020 மற்றும் 2021ஆம் செப்டம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் பராமரிப்பு பணிக்காக 2வது அணுஉலையில் மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டது. பராமரிப்பு பணிகள் முடிந்து அதே மாதம் 26ஆம் தேதி மாலை மீண்டும் மின்னுற்பத்தி தொடங்கியது.

பராமரிப்பு பணிகள்
இதற்கிடையே இன்று முதல் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2வது உலையில் அதிகாலை பராமரிப்பு பணிக்காக மீண்டும் மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது . இதனால் 1000 மெகாவாட் மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிகள் சுமார் 8 வாரங்களுக்கு நடைபெறம் என்றும், பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர் மின் உற்பத்தி தொடங்கும் என அணு மின் நிலைய நிர்வாகத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

மின் தடை அபாயம்
தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே கடும் வெயில் கொளுத்தி வருகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் கடும் வெயில் காரணமாக மக்கள் அவதி அடைந்துள்ளனர் அவ்வப்போது ஏற்படும் மின்தடையும் சிக்கலை மேலும் ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இரண்டாவது உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி மின் தடை அபாயத்தை மேலும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications