"பொருநை" அருங்காட்சியகம்.. இன்று அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்: ரூ.33 கோடியில் பிரம்மாண்டம்
சென்னை: நெல்லையில் அமைக்கப்படவுள்ள பொருநை அருங்காட்சியக கட்டுமான பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொல்லியல் துறை சார்பில் ரூ. 33 கோடி மதிப்பில் நவீன வசதிகளோடு பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது.
பொருநை: கடந்த வருடம் செப்டம்பர் மாதம், சட்டசபை கூட்டத்தொடரில், முதல்வர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி, நெல்லை மாநகரில் பொருநை நாகரீகத்தை மையப்படுத்தி பொருநை நாகரிகத்தின் அடிநாதமாக இருக்கும் தாமிரபரணி ஆற்றின் கரையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளையில் அகழாய்வு மூலம் கிடைத்த பல்வேறு பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

முதல்வரின் இந்த அறிவிப்பினையடுத்து, கடந்த நவம்பரில், நெல்லையில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடத்தை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர்.. அந்தவகையில், பாளை கேடிசி நகரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் 4 வழிச்சாலையில் ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில், பொருநை அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது..
அமைச்சர் தங்கம் தென்னரசு: அந்த இடத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.. மொத்தம் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள இந்த அருங்காட்சியகத்திற்கு 13 ஏக்கர் பரப்பளவில் இடம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழரின் அடையாளத்தை உலக மக்களுக்கு எடுத்துச்செல்லும் வகையில் அமைய உள்ள இந்த அருங்காட்சியகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று நடைபெற்றது.. முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக, இந்த அடிக்கல் நாட்டும் பணிகளை துவக்கி வைத்தார்.. இன்று காலை நடந்த நிகழ்ச்சியில், தமிழக தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

ராஜகண்ணப்பன்: தொல்லியல் துறை சார்பில் ரூ. 33 கோடி மதிப்பில் நவீன வசதிகளோடு பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. உலகத்தரத்தில் அமைய உள்ள இந்த அருங்காட்சியகத்தின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன தெரியுமா?
அகழாய்வு மூலம் கிடைத்த பொருட்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், கொற்கையில் 812 பொருட்கள், ஆதிச்சநல்லூரில் 1,620 பொருட்கள், சிவகளையில் 185 பொருட்கள் என 2,617 பொருட்கள் அகழாய்வு மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.. இதைத்தவிர, 106 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள், பொருநை அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்! -
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications