Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கரூர் கேஸில் என் மீது பழியை போட்டார்கள்.. ஜனநாயகனை முடக்கினார்கள்.. அப்படியே ஆக்ரோஷமான விஜய்!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: கரூர் விவகாரம் தொடர்பாக என் மீது பழியை போட்டார்கள். என்னை முடக்க பார்த்தார்கள். நான் முடங்கவில்லை. நான் வீட்டில் உட்காரவில்லை. மக்கள் இப்போதும் என்னுடன் இருக்கிறார்கள். இதை பார்த்து அவர்களுக்கு ஷாக். என்னடா மக்கள் இப்போதும் இவருடன் இருக்கிறார் என்று அவர்களுக்கு கோபம், என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நெல்லையில் இன்று பேசினார்.

இன்று தமிழக வெற்றிக் கழகம் சார்பாக அதன் தலைவர் விஜய் திருநெல்வேலியில் பிரச்சாரம் செய்கையில், திமுக கையில் முழு பவரும் இருந்திருந்தால் இந்த நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடந்திருக்காது. ஸ்டாலின் சார் அதிகாரம் இல்லாத முதல்வராக இருப்பதால் இந்த நிகழ்ச்சி நடந்திருக்கிறது. இப்போது அவரிடம் முழு அதிகாரம் இருந்தால் எனக்கு அனுமதி கொடுத்திருக்க மாட்டார்கள்.

vijay

என் நெஞ்சில் குடியிருக்கும் திருநெல்வேலி மக்களுக்கு வணக்கம் எனக்கூறி தவெக தலைவர் விஜய் பேச்சை தொடங்கினார்; உங்கள் மகன், உங்கள் அண்ணன், உங்கள் நண்பன் உங்களைத்தேடி வந்திருக்கிறேன்; அதிகாரமில்லாத முதல்வராக ஸ்டாலின் இருப்பதால் நெல்லையில் நிகழ்ச்சி நடத்த முடிந்திருக்கிறது.

உங்களுக்காக நான் வந்துவிடக் கூடாது என்பதே திமுக, பாஜகவின் நோக்கம். மீண்டும் திமுக ஆட்சிக்கு வர முடியாத சூழலை மக்கள் ஏற்படுத்திவிட்டார்கள். திமுகவின் தேர்தல் கணக்குகளை மக்கள் புதைத்துவிட்டார்கள். உண்மையான காங்கிரஸ் கட்சி தவெக பக்கம் நிற்கிறது.

கரூர் விவகாரம் தொடர்பாக என் மீது பழியை போட்டார்கள். என்னை முடக்க பார்த்தார்கள். நான் முடங்கவில்லை. நான் வீட்டில் உட்காரவில்லை. மக்கள் இப்போதும் என்னுடன் இருக்கிறார்கள். இதை பார்த்து அவர்களுக்கு ஷாக். என்னடா மக்கள் இப்போதும் இவருடன் இருக்கிறார் என்று அவர்களுக்கு கோபம்.

சரி இவரை எப்படியாவது முடக்க வேண்டும் என்று ஜனநாயகன் படத்தை முடக்கினார்கள், அது யார் என்று சொல்ல மாட்டேன். என் படத்தை முடக்கினால் நான் முடங்கிவிடுவேன் என்று நினைத்தார்கள். ஆனால் நான் முடங்கவில்லை. வலிமையாக இருக்கிறேன். இதை பார்த்து ஷாக் ஆனவர்கள் என்னை முடக்க வேண்டும் என்று எஸ்ஓபி கொண்டு வந்தனர்.

என்னை மட்டும் முடக்க வேண்டும் என்று எஸ்ஓபி கொண்டு வந்தனர். நான் செயல்படக்கூடாது என்று எஸ்ஓபி கொண்டு வந்தனர். அதை எல்லாம் மீறி நான் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறேன். இந்த எஸ்ஓபி என்னை முடக்காது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+