Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பச்ச குழந்தை.. யூகேஜி மாணவிக்கு பாலியல் கொடுமை.. செய்தது பள்ளி தாளாளர் கணவர்.. போளூர் ஷாக்

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, யூகேஜி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி தாளாளரின் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த கொடுமையான சம்பவம், பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கங்கை சூடாமணி கிராமத்தில், தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியை, சேத்பட் பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவரின் மனைவி பிரபாவதி என்பவர் நடத்தி வருகிறார். மேலும் காமராஜ் என்பவர் சேத்பட் அருகே உலகபட்டு கிராமத்தில் உள்ள அரசுபள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். தனது மனைவி பிரபாவதி நடத்தும் சாந்தா பள்ளிக்கு காமராஜ் அடிக்கடி வந்து செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

 Tiruvannamalai: School principal arrested for sexually assaulting UKG student

இந்தப் பள்ளியில், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே சேத்பட் பகுதியை சேர்ந்த தம்பதியினரின் மகள் படித்து வந்துள்ளார். இதனிடையே, பள்ளியின் தாளாளர் பிரபாவதி கணவர் காமராஜ், இந்தப் பள்ளி குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவி, வீட்டுக்குச் சென்று அழுவதை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். சிறுமியின் உடலை பரிசோதனை செய்தபோது உடலில் காயங்கள் காணப்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து, உடனடியாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு நடைபெற்ற சிகிச்சையில், சிறுமியை பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பாலியல் பலாத்காரம் செய்ததாக, காமராஜ் மீது சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில், சேத்துப்பட்டு இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசார் அந்தப் பள்ளிக்குச் சென்றனர். பள்ளி நிர்வாகத்திடம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டார்.

இதனிடையே குற்றம்சாட்டப்பட்ட தாளாளர் காமராஜ் தலைமறைவானார். அவரை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், பள்ளிச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டுக்கு இடையே, கோவிலுக்கு போய் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிய காமராஜ், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் போலீசாரால் கைது செய்தனர். திருவண்ணாமலை அருகே, யூகேஜி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி தாளாளர் காமராஜ் கைது செய்யப்பட்ட சம்பவம், பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே அவர் அரசு ஆசிரியர் வேலையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமி படிக்கும் பள்ளியில் பிற மாணாக்கர்களின் பெற்றோர் குவிந்ததால், அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+