ஆரணி கிணற்றில் தண்ணீர் இரைத்த புதுமண தம்பதி.. அடுத்தடுத்து நடந்ததை பாருங்க.. திகைத்த திருவண்ணாமலை
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாப்பிள்ளையால் கதிகலங்கி போயிருக்கிறார்கள் அந்த பகுதி மக்கள்.. இது தொடர்பான விசாரணையும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்துள்ளது புதுப்பாளையம் ஒன்றியத்துக்குட்பட்டது காரப்பட்டு என்ற கிராமம். இங்கு வசித்து வந்தவர் பரமேஸ்குமார்.. இவருக்கு 23 வயதாகிறது.

தம்பதி: இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.. மனைவி பெயர் நிரோஷா .. நேற்று மாலை, புதுமண தம்பதியர் 2 பேரும் சேர்ந்து, வீட்டின் பின்பக்கம் உள்ள கிணற்றில் கயிறு கட்டி வாளியில் தண்ணீர் எடுத்திருக்கிறார்கள்.. அப்போது, எதிர்பாராதவிதமாக பரமேஸ்குமார் கிணற்றில் தவறி விழுந்துவிட்டார்.. இதனால் நிரோஷா பதறிப்போனார்.. ஆனால், பரமேஸ்குமாருக்கு நீச்சல் தெரியும் என்பதால், மெதுவாக நீந்த முயன்றார்..
அது பழைய கிணறு என்பதால், கிணற்றுக்குள் ஏராளமான செடி கொடிகள் வளர்ந்திருந்தன.. எனினும், அந்த செடி கொடிகளை பிடித்து கொண்டே, தட்டுத்தடுமாறி மேலே ஏற முயன்றார். இதைப்பார்த்ததுமே மனைவிக்கு ஓரளவு நிம்மதி வந்தது..
செடி கொடிகள்: செடிகொடிகளை பிடித்து ஏற துவங்கியதுமே, பரமேஸ்குமாரை அங்கிருந்த விஷப்பாம்பு ஒன்று கடித்துவிட்டது.. இதனால், பதற்றமடைந்த பரமேஸ்வர குமார், "என்னை விஷப்பாம்பு கடித்துவிட்டது. என்னால் மேலே ஏற முடியவில்லை" என்று மனைவியிடம் சொல்லியபடியே, மயங்கிய நிலையில் அதே கிணற்றில் விழுந்து மூழ்கிவிட்டார்.
கணவன் சொன்னதையும், கண்ணெதிரே கணவன் தண்ணீரில் மூழ்குவதையும் கண்டு அதிர்ச்சியடைந்த நிரோஷா, அலறி கூச்சலிட்டார்... அப்போதுதான், சத்தம் கேட்டு அக்கம்பக்கத்திலிருந்தவர்கள், ஓடிவந்து, கிணற்றில் குதித்து, மயங்கிக்கிடந்த பரமேஸ்குமாரையும் காப்பாற்ற முயன்றார்கள்.. ஆனால், அந்த பாம்பு அங்கேயே இருந்ததால், கிணற்றுக்குள் இறங்குவதற்கு எல்லாருமே பயந்தார்கள்.. அதனால், வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
செங்கம்: செங்கத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, கிணற்றில் இறங்கினர்.. ஆனால், அதற்குள் பரமேஸ்குமார் இறந்து விட்டார்... தீயணைப்புத் துறையினர் அவர் சடலத்தை மீட்டு மேலே கொண்டு வந்தனர். போஸ்ட்ட மார்ட்டம் துடிந்ததையடுத்து, பரமேஸ்வரன் உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச்சம்பவம், திருவண்ணாமலையில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
மனைவி நிரோஷாவின் வீட்டிற்கு பின்புறம் இந்த கிணறு உள்ளது.. விவசாய கிணறு என்பதால், தண்ணீர் எப்போதுமே நிறைந்திருக்குமாம்.. தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறி கிணற்றில் விழுந்துள்ளார் பரமேஸ்வர குமார்.. தீயணைப்பு வீரர்கள் வந்தபோது, கிணற்றின் கரையில் அந்த பாம்பு பதுங்கியிருந்ததாம்.. அதை லாவகமாக பிடித்து வெளியே எடுத்தபோதுதான், அது கண்ணாடிவிரியன் பாம்பு என்று தெரியவந்தது.












Click it and Unblock the Notifications