தகாத உறவின் போது தகராறு.. இளைஞரை கொன்ற பெண்.. போலீசில் சரண்
திருவண்ணாமலை: செய்யாறு அருகே தகாத உறவின் போது ஏற்பட்ட பிரச்னையில், இளைஞரை கழுத்தை நெரித்துக் கொன்ற பெண், போலீசில் சரண் அடைந்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பிரம்மதேசம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுளா. இவருக்கும் சிறுவலையத்தைச் சேர்ந்த சிட்டி பாபு என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த உறவினை கண்டித்து பார்த்த மஞ்சுளாவின் கணவர், மற்றும் சிட்டிபாவுவின் மனைவி ஆகியோர் இவர்களிடம் இருந்து பிரிந்து சென்றுவிட்டார்களாம்.
இந்நிலையில் நேற்று மதியம் பிரம்மதேசத்தில் உள்ள பாலாற்றில் இருவரும் தனிமையில் சந்தித்து கொண்டனராம்.
அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மஞ்சுளாவை சிட்டிபாபு தாக்கினாராம். இதனால் ஆத்திரம் அடைந்த மஞ்சுளா சிட்டிபாவுவின் கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளாராம். இதன்பின்னர் அவரே போலீசில் சென்று சரண் அடைந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications