அடுத்தடுத்து மயங்கி விழுந்த மாணவர்கள்.. மதிய உணவு சாப்பிட்டவர்களுக்கு வாந்தி.. நடந்தது என்ன
திருவாரூர்: அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
திருவாரூர் மாவட்டம் கண்டியூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.
நேற்று வழக்கம் போல இந்த மாணவ மாணவிகள் மதிய உணவு சாப்பிட்டு உள்ளனர். மதிய உணவு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, சுமார் 3 மணி அளவில் முதலில் ஏழு மாணவ மாணவியர் வகுப்பறையிலேயே வாந்தி எடுத்து, மயங்கி உள்ளனர்.

அவர்கள் உடனடியாக முதலுதவி சிகிச்சைக்காக ஆலங்குடி ஆரம்பச் சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து மதிய உணவு சாப்பிட்ட 37 மாணவ மாணவிகளையும் தலைமையாசிரியர் சுமதி மற்றும் ஆசிரியைகள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்..
இது தொடர்பான தகவல் கிடைத்ததும் திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவ மாணவிகளிடம் நலன் விசாரித்தார். மேலும் மாணவ- மாணவிகளுக்கு உரியச் சிகிச்சை அளிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
ஒரே நேரத்தில் அரசுப் பள்ளியில் மதிய உணவு உண்ட பல மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications