திருப்பதியில் சாமி தரிசனம் முடித்து வந்த எடப்பாடி.. ராமர் கோயில் பற்றி கேட்டதுமே கொடுத்த ரியாக்ஷன்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ராமர் கோயில் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு எடப்பாடி அளித்த பதிலை பார்க்கலாம்.
லோக்சபா தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த தேசிய அரசியல் களமும் பரரபரப்பில் உள்ளது. சில மாதங்களே இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தேர்தல் வேலைகளை இப்போதே ஆரம்பித்துவிட்டன. தேசிய அளவில் ஆளும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் போட்டி நிலவும் எனத் தெரிகிறது.

திருப்பதி கோவில் சாமி தரிசனம்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் எனத் தெரிகிறது. பாஜக தனியாக ஒரு கூட்டணியை அமைக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் பாஜகவை கழற்றிவிட்டது கழற்றிவிட்டதுதான் என்று அதிமுவின் ஜெயக்குமார் நேற்று பேட்டியின் போது திட்டவட்டமாக கூறிவிட்டார்.
அரசியல் பரபரப்புகளுக்கு நடுவே அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆன்மீக பயணத்திற்குச் சென்றுள்ளார். கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்ட எடப்பாடி பழனிசாமி, தொடர்ச்சியாகக் கோயில்களுக்குச் செல்வதை வாடிக்கையாகவே வைத்துள்ளார். அந்த வகையில், லோக் சபா தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி ஏழுமலையானைத் தரிசிக்க நேற்று மாலை குடும்பத்துடன் திருப்பதி மலைக்குச் சென்றார்.
எடப்பாடி பழனிசாமி பேட்டி: நேற்று மாலை அவர் வராஹ சாமி கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று வழிபட்டார். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி வராஹ சாமியைத் தரிசித்தார். பிறகு எடப்பாடி பழனிசாமி கொஞ்ச நேரம் அங்கேயே இருந்தார். நேற்று தரிசனத்தை முடித்துவிட்டு எடப்பாடி பழனிசாமி பிறகு விஐபி விருந்தினர் மாளிகைக்குத் திரும்பினார். தொடர்ந்து இன்று காலை எடப்பாடி பழனிசாமி திருப்பதி ஏழுமலையானை வழிபட்டார்.
ஏழுமலையான் கோவிலில் இன்று நடக்கும் அஷ்டதல பாத பத்மாராதனை சேவையிலும் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். கோயிலில் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ராமர் அயோத்தி கோவில் பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்து கூறியதாவது;-
4 குழுக்கள்: இதற்கு ஏற்கனவே கருத்து நான் சொல்லிவிட்டேன். ராமர் கோவில் அனைவருக்கும் பொதுவானது. யார் வேண்டுமானாலும் அந்த ஆலயத்திற்கு இறைவனை பிராத்தனை செய்யலாம். அதில் எந்த முரண்பாடும் கிடையாது. நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அதிமுக தொடங்கிவிட்டது. தேர்தல் தொடர்பாக 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 4 குழுக்களும் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகிறது" என்றார்.
-
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
பூவை ஜெகன்மூர்த்தி கட்சிக்கு 1 தொகுதியை ஒதுக்கியது அதிமுக! மீண்டும் கே.வி.குப்பத்தில் போட்டி -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications