திருப்பதி கோவிலுக்கு போறீங்களா? தேர்தல் அறிவிப்பால் தரிசனத்தில் முக்கிய மாற்றம்.. நோட் பண்ணுங்க
திருப்பதி: நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பால் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் வரும் 3 மாதங்களுக்கு திருப்பதி கோவில் தரிசனத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் பணக்கார கடவுளாக திருப்பதி ஏழுமலையான் இருக்கிறார். ஆந்திர மாநிலம் திருப்பதி சென்று வந்தால் வாழ்வில் திருப்பம் ஏற்படும் எனக்கூறுவது உண்டு. திருப்பதி ஏழுமழையான் கோவிலை வைத்து தான் இப்படி சொல்கின்றனர்.

ஆந்திராவில் மே 13ம் தேதி சட்டசபை தேர்தல்.. ஒடிசா உள்பட மேலும் 3 மாநிலங்களுக்கும் தேர்தல் அறிவிப்பு
இந்த கோவிலுக்கு ஆந்திரா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்பதி ஏழுலையான் கோவிலுக்கு வெளிநாடுகளில் இருந்தும் கூட பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில் தான் லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பால் நேற்று முதல் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. இந்நிலையில் தான் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தரிசனத்தில் மாற்றங்கள் செய்துள்ளது. அதன்படி விஐபி தரிசனத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக விஐபி தரிசனத்தில் பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படும். ஆனால் இப்போது நடத்தை விதி அமலில் இருப்பதால் பரிந்துரை கடிதங்கள் என்பது ஏற்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பரிந்துரை கடிதங்கள் மூலம் கோவிலில் தங்கும் வசதி கொடுக்கப்படும். ஆனால் இனி அந்த வசதி ஏற்படுத்தி தரப்படாது. இருப்பினும் உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே அவர்களின் பொறுப்புக்கு ஏற்க சலுகைகள் அளிக்கப்படும். மாறாக பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படாது. இந்த கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும் ஜுன் மாதம் வரை இந்த நடைமுறைகள் பின்பற்றப்படும் என திருப்பதி கோவிலை நிர்வகித்து வரும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி கோவில் ஆந்திராவில் அமைந்துள்ளது. ஆந்திராவை பொறுத்தமட்டில் லோக்சபா தேர்தல் மற்றும் ஆந்திர மாநில சட்டசபை தேர்தல் என்பது ஒன்றாக நடைபெற உள்ளது. ஆந்திரா சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் வரும் ஜுன் 11ம் தேதி முடிவடையும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மே மாதம் 13ம் தேதி ஒரே நாளில் ஆந்திரா சட்டசபை மற்றும் ஆந்திரா லோக்சபா தேர்தல்கள் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
முன்னதாக சட்டசபை, லோக்சபா தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 18ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு செய்ய மார்ச் 25 கடைசி நாளாகும். மனு மீதான பரிசீலனை என்பது ஏப்ரல் 26ல் நடக்கும். வேட்பு மனு மனு வாபஸ் பெற ஏப்ரல் 26ம் தேதி கடைசி நாளாகும். தேர்தல் என்பது மே மாதம் 13ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களில் மீண்டும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. மாறாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா மற்றும் பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து களமிறங்கி உள்ளன. இப்படி சட்டசபை, லோக்சபா தேர்தல் ஒன்றாக நடைபெற உள்ளதால் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகி உள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications