5 பேரின் உயிரை பறித்த திருப்பூர் சாலை விபத்து.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.. நிதியுதவி அறிவிப்பு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே இன்று கார்-டேங்கர் லாரி மோதிய விபத்தில் 5 பேர் பலியான நிலையில் அவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, நிதியுதவியை அறிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மணக்கடவு எனும் இடத்தில் இன்று மாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரும், எதிரே வந்த டேங்கர் லாரியும் பயங்கரமாக மோதிக்கொண்டன.

இதில் காரில் பயணித்தவர்களில் சம்பவ இடத்தில் 4 பேரும், மருத்துவமனையில் ஒருவர் என மொத்தம் 5 பேர் பலியாகினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மேலும் ஒருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று தரிசனம் முடித்துவிட்டு காரில் தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியது தெரியவந்தது. இந்நிலையில் தான் விபத்தில் இறந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, நிதியுதவியை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தரப்பில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மணக்கடவு கிராமம் ஆலங்காட்டு பிரிவு என்ற இடத்தில் இன்று மாலை டேங்கர் லாரியும், நான்கு சக்கர வாகனமும் நேருக்கு நேர் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டது. இதில் 5 பேர் பலியாகி உள்ளனர்.
நான்கு சக்கர வாகனத்தில் பயணம் செய்த தாராபுரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 65), அவரது மனைவி செல்வி (50), கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வஞ்சியம்மா நகரை சேர்ந்த தமிழ்மணி (50), அவரது மனைவி சித்ரா (45) ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள். மேலும் திண்டுக்கல்லை சேர்ந்த கலாராணி (55)என்பவர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்லையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுளேன்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications