கரும்பு காட்டிலிருந்து யானை வந்தது.. ஆனால் ஆணையை காணோம்.. சின்னத்தம்பியை நாளை பிடிக்க முடிவு
Recommended Video

திருப்பூர்: உடுமலையில் சுற்றி வரும் சின்னத்தம்பி கரும்பு காட்டுக்குள் இருந்து வெளியே வந்துவிட்டாலும் அவனை இன்று பிடிக்கவில்லை என வனத்துறையினர் தெரிவித்தனர்.
கோவை தடாகம் வனப்பகுதியில் சுற்றித் திரிந்த சின்னத்தம்பியை வனத்துறையினர் பிடித்து வரகழியாறு வனப்பகுதியில் விட்டுள்ளனர். ஆனால் அந்த யானையோ விட்ட வேகத்தில் 100 கி.மீ. தூரம் நடந்தே வந்து மீண்டும் உடுமலைக்குள் நுழைந்தது.

எனினும் யாருக்கும் எவ்வித தொந்தரவையும் அந்த யானை கொடுக்கவில்லை. இந்நிலையில் அந்த யானையை கும்கியாக மாற்றக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் இதுதொடர்பான வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உடுமலை பகுதியில் சுற்றி வரும் சின்னத்தம்பி யானையை பிடிக்க வனத்துறையினருக்கு உத்தரவிடப்படுகிறது.
அந்த யானையை நிரந்தரமாக முகாமில் வைப்பதா, காட்டுக்குள் விடுவதா என்பது பின்னர் அறிவிக்கப்படும். அதுகுறித்த இறுதி முடிவை தலைமை வனப் பாதுகாவலர் எடுக்க வேண்டும். சின்னத்தம்பியை பிடிக்கும் போது துன்புறுத்தவோ காயப்படுத்தவோ கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கண்ணாடிபுதூர் கரும்பு காட்டில் உள்ள சின்னத்தம்பியை சமதள பகுதிக்கு வரவழைத்து மயக்க ஊசி செலுத்த வனத்துறையினர் திட்டமிட்டனர். அதன்படி காலை முதலே சின்னத்தம்பியின் வருகைக்காக காத்திருந்தனர். அவன் கரும்பு காட்டில் இருந்து வெளியே வந்துவிட்டான்.
இந்த நிலையில் அவனை பிடிப்பதற்கான ஆணையை உயர் அதிகாரிகள் கொண்டு வர தாமதமாகியுள்ளது. மேலும் மாலை 6 மணிக்கு மேல் யானைக்கு மயக்க ஊசி செலுத்தக் கூடாது என்பதால் இன்று சின்னத்தம்பியை பிடிக்கும் முயற்சி கைவிடப்பட்டுள்ளது. நாளை மயக்க ஊசி செலுத்த வனத்துறையினர் ஆயத்தமாகியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications