ராமஜெயம் ஒரு அடாவடி! நேரு அமைச்சராக இருக்க என்ன காரணம்? பட்டாசாய் வெடித்த சூர்யா சிவா! பறந்த புகார்!
திருச்சி : திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவாவின் மகனான சூர்யா சிவா பாஜகவில் சேர்ந்த நிலையில் தற்போது அமைச்சர் கே என் நேரு குறித்தும் அவரது சகோதரர் ராமஜெயம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர் மீது திருச்சி ஐஜி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய தமிழகத்தின் திமுக பிரமுகர்கள் மிகவும் குறிப்பிடத்தகுந்த ஒரு முக்கிய நிர்வாகி என்றால் திருச்சி சிவா என்று கண்ணை மூடிக்கொண்டு உடன்பிறப்புகள் சொல்லுவார்கள்.
திமுக தலைவராக கருணாநிதி இருந்த போதும் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைவராக இருக்கும் போதும் கட்சியில் திருச்சி சிவாவுக்கு கொடுக்கப்படும் அங்கீகாரம் ஒருபோதும் குறைந்தபாடில்லை. தொடர்ந்து பலமுறை மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் திருச்சி சிவா நாடாளுமன்றத்தில் திமுகவின் முக்கிய முகங்களில் ஒருவராக இருக்கிறார்.

சூர்யா சிவா
இந்த நிலையில் திருச்சி சிவா உடன் கருத்து மோதல் காரணமாக நீண்ட நாட்கள் அவருடன் பேசாமல் இருக்கும் அவரது மகன் சூர்யா சிவா பாஜகவில் இணைந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து அவர் பாஜகவில் இணைந்த நிலையில் அவருக்கு பாஜக ஓபிசி பிரிவு மாநில செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு ஊடகங்களிலும் யூட்யூப் சேனல்களிலும் திமுகவுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகிறார்.

சர்ச்சைப் பேட்டி
இந்நிலையில் வழக்கு ஒன்றில் சிக்கி வெளியே வந்த அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல யூட்யூப் சேனல் ஒன்றில் பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சரை விமர்சனம் செய்து பேசியதோடு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சரின் மறைந்த தம்பி ராமஜெயம் குறித்தும் பல விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

ராமஜெயம்
ராமஜெயம் கொலை செய்யப்பட்ட வழக்கு தற்போது விசாரணையில் இருந்தாலும் குற்றவாளிகளை ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது. கொலை செய்தவரை கண்டுபிடித்து தண்டனை வாங்கி தரும் அளவிற்கு ராமஜெயம் தியாகி அல்ல என்றும், மேலும் மறைந்த ராமஜெயம் அடாவடியானவர் என்றும் அவர்களுடைய வளர்ச்சியில் தான் தற்போது அமைச்சர் கே.என்.நேரு வாழ்ந்து வருகிறார் என்றும் பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

திமுக புகார்
இந்நிலையில் சூர்யா சிவாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சி மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண் மத்திய மண்டல காவல்துறை தலைவரிடம் கார் மனு அளித்துள்ளார். அதில் ஏற்கனவே தன்னிடம் பணியாற்றிய கார் ஓட்டுனருக்கு முறையான சம்பளம் வழங்காமல் அதை கேட்க சென்றவரை கொலை முயற்சி செய்ததாக வழக்கு அவர் மீது பதிவு செய்யப்பட்டு இருந்தும் தற்போது மீண்டும் இப்படி சர்ச்சைக்குரிய பேச்சை வெளியிட்டு இருக்கிறார். எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications