ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரசாத ஸ்டால் எரிந்து நாசம்.. ரூ 4 லட்சம் பொருள்கள் சாம்பல்
திருச்சி: ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வளாகத்தில் செயல்பட்டு வரும் பிரசாதக் கடையில் (தனியாரால் நடத்தப்படுவது) திங்கள்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
Recommended Video
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறும். இதில் வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறப்பு பெற்றது. பகல் பத்து, இராப் பத்து உற்சவங்களில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வருவார்கள்.

தினமும் சிறப்பு பூஜைகள் நடை பெறுவதால், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்க கருடாழ்வார் சன்னதி அருகே பிரசாத ஸ்டால் ஒன்று உள்ளது. இங்கு புளியோதரை, தயிர் சாதம், பொங்கல், வடை, முறுக்கு, அதிரசம், லட்டு போன்ற பிரசாதங்கள் விற்கப்படும்.
இரவு 9 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும் போது பிரசாத ஸ்டால்களும் அடைக்கப்படும். வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு பிரசாத ஸ்டால் மூடப்பட்டது. நேற்று அதிகாலை 5 மணியளவில் நடைபெற்ற விஸ்வரூப தரிசனத்துக்காக நேற்று அதிகாலை 4 மணியளவில் பட்டர்கள், ஊழியர்கள் கோயில் நடையை திறந்தனர். அப்போது கருடாழ்வார் சன்னதி அருகே பிரசாத ஸ்டால் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
இதில் மண்டபம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்ததை பார்த்த பட்டர்கள், ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தண்ணீர் எடுத்து வந்து ஊற்றி தீயை போராடி அணைத்தனர். அதற்குள் ஸ்டாலில் இருந்த பிரசாதங்கள் சாம்பலானது.

மின்சார விளக்குகள், வயர்கள் கருகின. மண்டபம் முழுவதும் கரும்புகையாக இருந்ததால் கோயில் துப்புரவுப் பணியாளர்கள் கழுவி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். தீவிபத்தால் அப்பகுதியில் மின்சாரம் தடை செய்யப்பட்டது.
கோயில் ஊழியர்கள் உடனடியாக தீயை அணைத்ததால் பிரசாத ஸ்டாலின் அருகே இருந்த கோயில் இ-உண்டியல், ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் நோட்டுகள் தப்பியது. ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தினர். கோயிலில் நடைசாத்தும்போது சாம்பிராணி காட்டுவது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவு சாம்பிராணி காட்டிய போது தூபகாலிலிருந்து பரவி தீ பிடித்ததா அல்லது மின்கசிவால் தீ பிடித்ததா என போலீசார் விசாரித்து வருகின்றனர். கோயிலில் தீ விபத்தால் விஸ்வரூப தரிசனத்திற்காக வந்த பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
கோயிலில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து, ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தினா் விசாரணை நடத்தி வருகின்றனா். தீ விபத்தில் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதமடைந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications