கொங்கு நாடு.. வாய்ப்பே இல்லை.. குரல் கொடுத்த திருநாவுக்கரசர் .. ராமதாஸ் மீதும் தாக்கு!
திருச்சி : தமிழ்நாட்டில் 'கொங்கு நாடு' என்று ஒன்றில்லை. ஒரே ஒரு நாடு தமிழ்நாடு மட்டும்தான். அந்தபக்கம் டாக்டர் ராமதாஸ் வட மாவட்டங்களை பிரித்து கேட்கிறார். இந்தபக்கம் இவர்கள் கேட்கிறார்கள். இப்படி பிரித்துக் கொண்டே சென்றால் என்னாவது? என்று திருச்சி லோக்சபா தொகுதி எம்பி திருநாவுக்கரசர் கூறினார்.
தற்போது கொங்கு நாடு என்று தனியாக பிரிப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் வருங்காலங்களில், மக்கள்தொகை பெருக்கம், நிர்வாக வசதிகளுக்காக வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பிருக்கிறது என்றும் திருநாவுக்கரசர் எம்.பி கூறியுள்ளார்.
திருச்சி விமான நிலைய ஆணையக்குழு ஆலோசனை கூட்டம், திருச்சி லோக்சபா எம்பி திருநாவுக்கரசர் தலைமையில் நடந்தது. இதில், விமான நிலைய இயக்குனர் தர்மராஜ், எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் உள்ளிட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றார்கள்.

ராஜ்நாத் சிங்
இந்த கூட்டத்திற்கு பின் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசும் போது , திருச்சி விமான நிலையத்தை விரிவுப்படுத்த சுமார், 700 ஏக்கர் நிலம் தேவையாகும். ராணுவத்திடம் உள்ள நிலத்தை பெற, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து அண்மையில் வலியுறுத்தினேன். ராணுவ நிலத்தை வழங்க, உரிய ஏற்பாடுகளை செய்கிறேன் என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்தார்.

46 ஏக்கர் நிலம்
மற்ற இடங்களில் பொதுமக்களின் ஒப்புதலோடு நிலம் எடுக்க வேண்டும். அதனால் தான் நிலம் கையகப்படுத்தும் பணிகள் மெதுவாக நடந்து வருகிறது. திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்காக இதுவரை, 46 ஏக்கர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டிருக்கிறது. விமான நிலைய ஓடுதள விரிவாக்கப் பணிகள், தொடர்மழை மற்றும் கொரானா காரணமாக குறித்த நேரத்தில் முடிக்க முடியவில்லை. வரும், 2022 ஜூலை மாதத்திற்குள் பணிகள் முடிவடையும் என்றார்.

ராமதாஸ்
செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த திருநாவுக்கரசர் தமிழ்நாட்டில் 'கொங்கு நாடு' என்று ஒன்றில்லை. ஒரே ஒரு நாடு தமிழ்நாடு மட்டும்தான். அந்தபக்கம் டாக்டர் ராமதாஸ் வட மாவட்டங்களை பிரித்து கேட்கிறார். இந்தபக்கம் இவர்கள் கேட்கிறார்கள். இப்படி பிரித்துக் கொண்டே சென்றால் என்னாவது?

வருங்காலத்தில் நடக்கலாம்
எனக்கு தெரிந்து, தற்போது கொங்கு நாடு என்று தனியாக பிரிப்பதற்கு வாய்ப்பில்லை. வருங்காலங்களில், மக்கள்தொகை பெருக்கம், நிர்வாக வசதிகளுக்காக வேண்டுமானாலும் நடக்க வாய்ப்பு உள்ளது என்றார்.

கேட்கவில்லை
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை முயற்சிப்பதாக கூறப்படுவது குறித்து விளக்கம் அளித்த திருநாவுக்கரசர், நான் யாரிடமும் சென்று மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி வேண்டும் என்று கேட்கவில்லை. அதற்கான முயற்சியும் மேற்கொள்ளவில்லை.தலைமை எனக்கு பணித்தால், அந்த பணியை திறம்பட செய்ய நான் தயாராக இருக்கிறேன். வரும் உள்ளாட்சி தேர்தலிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடரும்" இவ்வாறு கூறினார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications