ரயிலுக்கு அடியில் போன ஜெயச்சந்திரன்.. நிற்கும் முன்பே கால் வைத்து.. பரபரத்த திருச்சி ரயில்வே ஸ்டேஷன்
திருச்சி: ரயில் நிற்பதற்கு முன்பாகவே, ஓடும் ரயிலில் ஏறிய நபர் திடீரென கால் இடறி, ரயிலுக்கு அடியில் சிக்கி கொண்டுவிட்டார்.. இதனால் திருச்சி ரயில்வே ஸ்டேஷனில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.
திருச்சி ரயில் நிலையத்தில், பல்லவன் விரைவு ரயிலில் ஜெயச்சந்திரன் என்பவர் பயணம் செய்துள்ளார்.. ரயிவே ஸ்டேஷன் வந்ததுமே, எழுந்து நின்று கொண்ட ஜெயச்சந்திரன், ரயில் நிற்பதற்கு முன்பாக இறங்கமுயன்றார்..

இதில், திடீரென கால் தவறி விழுந்துவிட்டார்.. பிளாட்பாரத்துக்கும், ரயிலுக்கும் இடையில் ஜெயச்சந்திரன் சிக்கிக்கொண்டதை பார்த்து பயணிகள் அனைவரும் பதறினார்கள்.. இதையடுத்து, உடனடியாக ரயில் நிலைய போலீசாருடன் சக பயணிகளும், இணைந்து ஜெயச்சந்திரனை மீட்க உதவினார்கள்..
இறுதியில், சிறிது நேர பரபரப்புக்கு பிறகு, ரயிலுக்கு அடியில் சிக்கி கொண்டிருந்த ஜெயச்சந்திரனை பாதுகாப்பாக மீட்டனர்.. இதனால் திருச்சி ரயில்வே சந்திப்பில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது. ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஜெயச்சந்திரன் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.. அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து, தற்போது உடல்நலத்துடன் உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ரயிலில் விபத்தில் சிக்கிய ஜெயச்சந்திரன், ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி ஆவார்.
தமிழகத்தை பொறுத்தவரை, ரயில் பயணத்தின்போது தவறி விழுந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தவாறே உள்ளது.. கடந்த 50 மாதங்களில், மொத்தம் 87 பேர் ரயிலிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்திருக்கிறார்களாம்.. இதில், அதிகபட்சமாக கடந்த வருடம் மட்டுமே 42 பேர் ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக ஆர்டிஐ தகவல் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications