கொஞ்சம் அப்டேட் ஆகுங்க விஜய்.. செங்கோட்டையன் காலத்தில் நடந்த சம்பவம் அது.. அன்பில் மகேஷ் பதிலடி!
திருச்சி: தமிழ்நாட்டில் மாணவர்கள் இடைநிற்றல் சதவிகிதம் 2017-18ல் செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த போதுதான் அதிகமாக இருந்தது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். விஜய் பழைய செய்திகளை வைத்து பேசுவதாக கூறிய அன்பில் மகேஷ், கொஞ்சம் அப்டேட் ஆக வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் பேசுகையில், திமுக ஒரு தீய சக்தி என்று ஆவேசமாக விமர்சித்தார். அதேபோல் அத்திகடவு - அவினாசி திட்டத்தை ஏன் விரிவுப்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பிய விஜய், தமிழ்நாட்டில் எதற்காக மாணவர்கள் இடைநிற்றல் அதிகரித்துள்ளது? என்றும் கேள்வி எழுப்பினார். இதற்கான புள்ளி விவரம் எதையும் விஜய் கொடுக்கவில்லை.

இந்த நிலையில் விஜய்யின் விமர்சனம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை பேசுகையில், திமுக ஆட்சியில் ஒரு குடும்பத்தில் ஒரு பயனாளியாவது இந்த அரசில் பயன்பெற்று இருப்பார் என்ற நிலைமையை உருவாக்கி தந்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினின் கரத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வலுப்படுத்தி வருகிறார்.
தமிழ்நாடு முதல்வர் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வருவதாக நாம் சொல்லவில்லை. அதற்கான தரவுகளை மத்திய அரசு கொடுத்து வருகிறது. அதேபோல் ஆட்சி மாற்றம் ஏற்பட காரணம் இன்று பெண்களின் மனநிலை. இன்னொன்று ஆதி திராவிட நலக்குழு மனநிலை. இதனை நாம் தொன்று தொட்டு பார்த்து வருகிறோம்.
இன்றைய பெண்களின் மனநிலை மகளிர் உதவித்தொகை, விடியல் பயணம் மூலம் அனைத்து தாய்மார்களின் மனதிலும் முதல்வர் ஸ்டாலின் நின்றுவிட்டார். முதல்வர் ஸ்டாலின் சாதிய ரீதியிலான பாடுபாடுகளை தகர்த்தெறியும் வண்ணம் காலனி என்ற சொல்ல இருக்கக் கூடாது என்று அரசாணை வெளியிட்டார். அப்படிபட்ட ஆட்சியை மீண்டும் நாம் அமைத்திட அயராது பாடுபடுவோம்.
வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து யார், எதற்காக நீக்கப்பட்டார்கள் என்ற விவரங்களை சேகரித்து அவர்களை வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஈரோட்டில் விஜய் பேசும் போர்து, தமிழ்நாட்டில் பள்ளி இடைநிற்றல் அதிகமாக உள்ளது என்றார். அது எனக்கு வருத்தம் அளிக்கிறது. அதிமுக ஆட்சி காலத்தில் 2017-18ஆம் ஆண்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் இருந்த காலத்தில் இதன் சதவிகிதம் 16ஆக இருந்தது.
தற்போது அந்த சதவிகித 7.7ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வந்த செய்தி. அப்போதே அதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. பழைய தகவல்களை வைத்துக் கொண்டு தவெக தலைவர் விஜய் திமுக அரசை குறை கூறி வருகிறார். அதனால் விஜய் தன்னை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே -
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
நாளை மறுநாள் தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் விஜய்.. புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பு! -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
பெண்களுக்காக புகார் கொடுக்க விஜய்க்கு என்ன தகுதி இருக்கு? உங்களுக்கு போட்டியே நான் தான்! ஜூலியின் புது வீடியோ -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
மோசமான ப்ரொபோசல்.. மிஸ் ஆன விஜய் படம்.. தலையெழுத்து படி தான் நடக்கும்.. நடிகர் அப்பாஸ் உருக்கம் -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
பாஜக பெயரை சொல்லவே சாகிறார்.. இவரா முதலமைச்சர்.. விஜய்யை வெளுத்து வாங்கிய கீதா ஜீவன்












Click it and Unblock the Notifications