தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி..போலீசாருக்கு காக்கிக்கு பதில் காவி சீருடை.. திருச்சியில் மிரட்டிய எச்.ராஜா
திருச்சி: தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமையும் போது போலீசாருக்கு காக்கிக்கு பதில் காவி சீருடையாக மாற்றுவோம் என அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா மிரட்டல் விடுத்துள்ளார்.
சனாதன ஒழிப்பு கொள்கையில் உறுதியாக இருப்போம் என அறிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் முதலில் இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து நேற்று தமிழ்நாடு முழுவதும் பாஜகவினரும் போராட்டம் நடத்தினர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வலியுறுத்தியும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பாஜகவினர் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். இதற்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை.
சென்னையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் திடீரென பாஜகவினர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர்.
திருச்சி திருவானைக்காவலில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகம் முற்றுகையிடப்படும் என்பது பாஜகவினர் அறிவிப்பு. இந்தப் போராட்டத்துக்கு மூத்த பாஜக தலைவர் எச்.ராஜா தலைமை வகித்தார்.
எச்.ராஜா தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் திருவானைக்காவல் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்து வேனில் ஏற்றினர். இதனால் போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளு முள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது மூத்த பாஜக தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் ஆவேசமாக கூறியதாவது: சனாதனத்தை ஒழிப்போம் என பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்யவில்லை. ஆனால் போலீசார் என்னை கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரும். அப்போது தமிழ்நாடு போலீசாரின் காக்கி சீருடை மாற்றப்படும். அவர்களுக்கு காக்கிக்கு பதிலாக காவி சீருடை கொடுப்போம்.
சனாதனம் என்பது ஏற்றத்தாழ்வை சொல்லவில்லை. சுபவீ, திருமாவளவன் போன்றோருக்குப் பின்னர்தான் ஆணவ கொலைகளே நடக்கின்றன. சனாதனத்தை ஒழிப்போம் என்பவர்கள் இனப்படுகொலை செய்வோம் என்கின்றனர். இந்த நிலைமையை மாற்றும் வரை பாஜக ஓய்ந்து போகாது. இவ்வாறு எச்.ராஜா கூறினார்.
-
அண்ணாமலைக்கு புதிய ‘ரோல்'..தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜக கொடுத்த முக்கிய ‘அசைன்மென்ட்' -
சர்ப்ரைஸ் வானதி சீனிவாசன்.. நோஸ் கட் அண்ணாமலை.. 2021 தேர்தல் பாஜக பிளாஷ்பேக் -
அவசரமாக திரும்பி வந்த அண்ணாமலை.. சென்னையில் மோடி.. இன்று பாஜகவின் கடைசி நேர ஆபரேஷன்.. யாரந்த 16 பேர் -
அமர், வினோஜ், சூர்யா.. அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் சீட் இல்லை.. பாஜக வேட்பாளர் பட்டியல் சொல்லும் சேதி -
மாமியாருக்கு பதில் மருமகள்.. வாரிசு அரசியல் பேசிவிட்டு இப்படியா? மொடக்குறிச்சி பாஜக வேட்பாளரின் பின்னணி -
செருப்பு போடாதவர்.. 75 வயதில் முதல்முறை எம்எல்ஏ.. யார் இந்த நாகர்கோவில் பாஜக வேட்பாளர் காந்தி? -
கோவை வடக்கில் வானதி சீனிவாசன் களம்: யார் இவர்? 2026 தேர்தலில் மீண்டும் கவனம் ஈர்க்கும் பாஜக முகம் -
இங்க இருக்குற திருவண்ணாமலைக்கு ஏர்போர்ட்.. அந்த பேச்சு பேசின அஸ்வத்தாமன் பெயர் லிஸ்டில் இல்லையே! -
திருநெல்வேலி 35 வருட அடையாளம் சார்.. யார் இந்த நயினார் நாகேந்திரன்.. சாத்தூரில் மாஸ்டர் பிளான் -
ஆதரவாளர்களுக்கு சீட்.. அண்ணாமலை வைத்த டிமாண்ட்.. பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதமாவதன் பின்னணி! -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
அண்ணாமலைக்கு இந்த பவர்ஃபுல் போஸ்ட்டிங் தர்றாரா மோடி.. கோவை பிடிவாதம் உடைந்ததா? லாபமா? நஷ்டமா












Click it and Unblock the Notifications