அடேங்கப்பா.. தூத்துக்குடியில் சிக்கிய 10 டன் போதைப் பொருள்! எங்கிருந்து வந்தது தெரியுமா?
தூத்துக்குடி: மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக சரக்கு பெட்டகம் மூலம் கடத்தி வரப்பட்ட 10 டன் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை, மத்திய வருவாய்த் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்தியாவில் உள்ள துறைமுகங்களின் வாயிலாக, போதைப் பொருட்கள் அவ்வப்போது கடத்தல் முயற்சி நடைபெற்று வரும் நிலையில், அதனை அதிகாரிகள் குறிவைத்து பிடிப்பது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில், தூத்துக்குடி துறைமுகம் வழியாக போதைப் பொருட்கள் உள்ளிட்ட ஏதேனும் தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுகிறதா? என்று மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு வரும் கப்பல் ஒன்றில், ஒயிட் சிமெண்ட் தயாரிக்கும் மூலப்பொருட்களுடன், தடை செய்யப்பட்ட பாப்பி சீட் என்னும் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மலேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த கப்பலில் இருந்து ஒரு கண்டெய்னரை சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அந்த கண்டெய்னரில் ஒயிட் சிமெண்ட் இருந்தது. அதற்கு
பின்புறம் ஈரம் புகாதவாறு பேக்கிங் செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் பாப்பி சீட் எனும் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து, அந்த கண்டெய்னரில் இருந்த சுமார் 10 டன் எடையிலான பாப்பி சீட் எனப்படும் போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட இந்தப் போதைப் பொருளின் மதிப்பு ரூ.1.75 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, ஒயிட் சிமெண்ட் கொண்டு வரப்பட்ட கண்டெய்னர் எந்த முகவரிக்கு கொண்டு வரப்பட்டது என் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். மேலும், இதுதொடர்பாக, தூத்துக்குடியைச் சேர்ந்த ஷிப்பிங் நிறுவனம் மற்றும் மதுரையில் உள்ள இறக்குமதி நிறுவனத்தில், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications