Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திரும்பும் தமிழர் வரலாறு! சிவகளையிலும் கண்டெடுக்கப்பட்ட தங்க பொருள்! தோண்ட தோண்ட வெளிவரும் உண்மைகள்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தையடுத்துள்ள சிவகளையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் தங்கத்திலான பொருள் கிடைத்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த பகுதியில் ஏற்கெனவே முதுமக்கள் தாழி, இரும்பு, வெண்கலம் மற்றும் சங்கு பொருட்கள் கிடைக்கப்பெற்ற நிலையில் தற்போது முதல்முறையாக தங்கத்திலான பொருள் கிடைத்திருக்கிறது.

பராக்கிரமபாண்டி திரட்டில் வாழ்விடப்பகுதிகளை கண்டறிவதற்காக நடந்து வரும் அகழாய்வு பணியில் இந்த தங்கம் கிடைத்திருக்கிறது.

வரலாறு

வரலாறு

உலகின் மிக தொன்மையான நாகரிகமாக சீனாவின் மஞ்சள் நதி நாகரிகம், கிரேக்கம், எகிப்து மற்றும் சிந்து சமவெளி நாகரிகள் மட்டுமே இருந்ததாக நம்பப்பட்டு வந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டின் கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கிடைக்க பெற்ற பொருட்கள் மேற்குறிப்பிட்ட தொன்மையான நாகரிகங்கள் பட்டியலில் தமிழர் நாகரிகம்தான் முதன்மையானது என உறுதி செய்துள்ளது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் திருவைக்குண்டம் பகுதியையொட்டியுள்ள ஆதிச்சநல்லூர் எனும் பகுதியில் கிடைக்கப்பெற்றுள்ள பொருட்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஆதிச்சநல்லூர்

ஆதிச்சநல்லூர்

இந்த பகுதியில் 1876ல் அகழாய்வு நடத்தப்பட்டது. இதனையடுத்து, 2004ம் ஆண்டு இப்பகுதியில் நடத்தப்பட்ட தொல்லியல் துறை ஆய்வில் சுமார் 169 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனையடுத்து இப்பகுதியின் முக்கியத்துவம் குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இதனை பாதுகாக்கப்பட்ட பகுதியாக நீதிமன்றம் அறிவித்தது. இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் சுமார் 3,000 முதல் 2,500 ஆண்டுகள் வரை பழமையானதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அதேபோல சங்க காலம் தொட்டு ஆங்கிலேயர்கள் காலத்திலும் இங்கு மக்கள் வாழ்ந்து வந்ததற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

 அகழ்வாய்வில் நாணயங்கள்

அகழ்வாய்வில் நாணயங்கள்

இதனையடுத்து ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டதில் கடந்த ஏப்ரல் மாதம் இப்பகுதியிலிருந்து இரண்டு பழங்கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த நாணயத்தில் ஒரு தொட்டியில் கடல் ஆமைகளின் உருவம், மரம், யானை, மீனின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. "இந்த நாணயங்கள், ஆதிச்சநல்லூரில் சங்கக் காலத்தில் மக்கள் வாழ்ந்ததையும் கடல் சார் வாணிபம் நடந்ததையும் உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது" என மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல கண்காணிப்பாளர் முனைவர் அருண்ராஜ் கூறியிருந்தார். இதனையடுத்து இந்த பகுதியில் தங்க கிரீடம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிவகளை

சிவகளை

இதன் தொடர்ச்சியாக ஆதிச்சநல்லூரிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ள சிவகளையில் பராக்கிரமபாண்டி திரட்டில் வாழ்விடப்பகுதிகளை கண்டறிவதற்காக மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் தங்கத்திலான பொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் தொல்லியல் துறை இயக்குநர் பிரபாகரன் தலைமையில் 3வது கட்டமாக ஆய்வுகள் நடந்து வருகிறது. இதில் சுமார் 40 பேர் பணியாற்றி வருகின்றனர்.

தங்கம்

தங்கம்

இதுவரையில் இந்த பகுதியில் சுமார் 40 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒரேயொரு குழியில் மட்டுமே சுமார் 16 தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. இது மட்டுமல்லாது, பழங்கால கல்வட்டங்கள், மண்பாண்ட பொருட்கள், இரும்பு, வெண்கலம் மற்றும் சங்கு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதிசயமாக நெல் மணிகள் போன்றும் சில பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக தற்போது முதன் முறையாக தங்கத்திலான பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+