ஆண் நண்பர்களுடன் 17 வயதில் உல்லாசம்..கண்டித்த தாய்..பக்கா ஸ்கெட்ச் போட்டு கழுத்தை அறுத்த “ஒத்த ரோசா”
தூத்துக்குடி : தூத்துக்குடியில் பல்வேறு ஆண்களுடன் தகாத முறையில் பழகியதை கண்டித்ததால் காதலன் மற்றும் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து பெற்ற தாயை மகளே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி வண்ணார் 2வதுதெருவில் வசித்து வருபவர் முனியலட்சுமி , இவர் தனது கணவனைப் பிரிந்து ஒரு ஆண்டாக மூன்று பிள்ளைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
அவரது கணவரான ஆட்டோ ஓட்டுநர் மாடசாமி அருகில் தாமோதர நகரில் வசித்து வருகிறார். தம்பதியினருக்கு 17 வயதில் ஒரு மகள் ஒருவர் உள்ளார்.

தூத்துக்குடியில் அதிர்ச்சி
பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த அந்த சிறுமி வயதுக்கு மீறி பல்வேறு நபர்களுடன் தகாத முறையில் பழகி வந்துள்ளார். முனியலட்சுமி வேலைக்கு செல்லும் போதெல்லாம் தனது காதலன் மற்றும் ஆண் நண்பர்களை வீட்டுக்கு வரவழைத்து தனிமையில் அத்துமீறியுள்ளார் அவர். இதனை அக்கப்பத்தினர் கூறியதையடுத்து ஆத்திரமடைந்த தாய் முனியலட்சுமி தன் மகள் ஆண்களிடம் பழகுவதை கண்டித்து உள்ளார்.

ஆண்களுடன் தகாத உறவு
இதனால் ஆத்திரமடைந்த அந்த சிறுமி முத்தையாபுரத்தைச் சேர்ந்த தனது காதலன் மற்றும் அவர்களுடைய நண்பர்களுடன் சேர்ந்து பெற்ற தாய் என்றும் பாராமல் அவரை கொலை செய்துவிட்டு, எங்காவாது தப்பி சென்று மகிழ்ச்சியாக வாழலாம் என திட்டமிட்டுள்ளனர். அதன்படி இன்று அதிகாலை தூங்கிக்கொண்டிருந்த தாய் முனிய லட்சுமியை கழுத்தை நெறித்தும் அரிவாளால் வெட்டியும் சிறுமி மற்றும் ஆண்நண்பர் என மூவரும் சேர்ந்து கொலை செய்ததாக கூறப்படுகிறது .கொலை செய்துவிட்டு இரண்டு ஆண் நண்பர்களும் தப்பி சென்றுவிட்டனர்.

தாய் கொலை
பின்பு யாரோ இரண்டு நபர்கள் என் அம்மாவை கொலை செய்துவிட்டு சென்றுள்ளனர் என தென்பாகம் காவல் நிலையதுக்கு தகவல் தெரிவித்து போன் செய்து உள்ளார் அந்த சிறுமி . உடனே விரைந்து வந்த தென்பாகம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காவல்துறை சம்பவ இடத்தில் இறந்த பெண்ணின் மகளிடம் விசாரிக்க வேண்டிய முறையில் விசாரித்ததில் மகள் மற்றும் ஆண் நண்பர் என மூவரும் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது.

மகள் கைது
தொடர்ந்து தாயைக் கொன்ற 17 வயது மகளிடம் நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் கொலைக்கு உடந்தையாக இருந்த ஆண் நண்பர் குறித்தும் தீவிரமாக பல்வேறு கோணங்களில் விசாரித்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி நகரப்பகுதியில் தொடர்ச்சியாக கொலை சம்பவம் அரங்கேறி வரும் நிலையில் பெற்ற தாயை மகள் தனது காதலன் மற்றும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications