திருச்செந்தூரில் நிலம்..திமுக நகராட்சி துணை தலைவர் மீது அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணீர் மல்க புகார்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தி.மு.க., நகராட்சி துணைத் தலைவர் உள்ளிட்டோர் தனது நிலத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி தலைமையாசிரியர் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மேலரதவீதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (81). அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு சொந்தமான நிலத்தை தி.மு.க.வை சேர்ந்த திருச்செந்தூர் நகராட்சி துணைத் தலைவர் ரமேஷ், கவுன்சிலர் கண்ணன், பெண் கவுன்சிலரின் கணவர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் சூறையாடி அபகரிக்க முயற்சிப்பதாக வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் கண்ணீர் மல்க சோமசுந்தரம் கூறியிருப்பதாவது:
திருச்செந்தூர் மேலரதவீதியில் வீடு மற்றும் வீட்டுடன் இணைந்த காலியிடமும் உள்ளது. 300 ச.மீ. நிலத்தில் ஆஸ்பஸ்டாஸ் ஷீட் போட்ட கட்டிடத்தை கட்டி சொத்து வரி செலுத்தி வருகிறேன். அந்த இடத்தில் வெல்டிங் ஷாப் நடத்துவதற்கு வாடகைக்கு விட்டுள்ளேன்.
இடத்தில் அருகே பொதுபாதை உள்ளது. அந்த பாதையின் சர்வே எண்ணும், வெல்டிங் ஷாப் உள்ள இடத்தின் சர்வே எண்ணும் ஒன்றாக உள்ளது. தனி பட்டா இதுவரை வழங்கவில்லை.
இந்நிலையில், அந்த இடத்தை அபகரிக்கும் நோக்கில், தி.மு.க.,வை சேர்ந்த நகராட்சி துணைத் தலைவர் ரமேஷ், 9 வது வார்டு கவுன்சிலர் கண்ணன், 22 வது வார்டு கவுன்சிலரின் கணவர் கார்த்திகேயன் ஆகியோர் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டு வருகின்றனர்.
அந்த நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இருந்தபோதிலும் நகராட்சி அதிகாரிகள் அவர்களுக்கு துணையாக செயல்பட்டு எனத்து தொந்தரவு கொடுத்து வருகின்றனர். எனக்கு நியாயம் கிடைக்க தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் தலையீட்டு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் வீடியோவில் கூறியுள்ளார்.
தி.மு.க., நிர்வாகிகள் மீது ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ஒருவர் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு நில அபகரிப்பு புகார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
கடலூர் மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
என்னை முதல்வராக்கினால்! பெண்களுக்கு ரூ 1 லட்சம்! ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ பேச்சால் கோபத்தில் தலைமை -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
வேல்முருகன் வெளியேற்றம்.. கடலூரில் திமுகவுக்கு இழப்புதான்.. சொல்கிறார் பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்! -
5 தொகுதிகள் ஒதுக்கும் திமுக.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு என்ன? 6 மணி நேரமாக நடந்த ஆலோசனை -
கோவை மாவட்டத்தில் 6 தொகுதிகளை கேட்கும் கூட்டணி! திமுகவுக்கு நிம்மதி கொடுத்த அந்த ரிப்போர்ட்! -
Duraimurugan: தவாக வேல்முருகன் விலகியது குறித்த கேள்விக்கு! துரைமுருகனின் face expression-ஐ பாருங்க -
"6 தொகுதிகளிலும் ஜெயித்திருப்போம்!" 2021 தேர்தல் குறித்து சிபிஎம் பெ.சண்முகம் அதிரடி விளக்கம்! -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications