புதுத்தாலி வாசத்துடன்.. மாலையும் கழுத்துமாக பூத்துக்குள் ஓடிய மணமக்கள்.. தூத்துக்குடி அருகே!
மணப்பாடு பூத்தில் புதுமண தம்பதி வாக்கு செலுத்தினர்
தூத்துக்குடி: மாலையும் கழுத்துமாக புது மணதம்பதி வாக்குச்சாவடிக்குள் நுழைந்ததை பார்த்தும் அங்கிருந்தோருக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.. பிறகுதான் ஜனநாயக கடமையாற்ற வந்துள்ளனர் என்பது தெரிந்தது!
தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. காலையில் இருந்தே இங்குள்ள வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர்.அதனால் மாலை வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது.
இந்த சமயத்தில்தான் ஒரு மணமண தம்பதி உள்ளே புகுந்தது.. உடன்குடி அருகே மணப்பாடு லைன் தெருவைச் சேர்ந்தவர் எம்பார்... இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்... இவர்தான் மாப்பிள்ளை.

கல்யாணம்
மணப்பாடு குண்டல் தெருவைச் சேர்ந்த விவினா என்பவர்தான் கல்யாண பொண்ணு.. மணப்பாடு புனித தூய ஆவி ஆலயத்தில் நேற்று கல்யாணம் சிறப்பாக முடிந்தது.. தாலி கட்டிய சிறிது நேரத்திலேயே மணமக்கள் 2 பேரும் வாக்களிக்க திட்டமிட்டனர்.

வாக்கு
இதற்காக இருவரும் மணக்கோலத்திலேயே மணப்பாடு புனித வளனார் மேல்நிலைப்பள்ளி பூத்துக்கு சென்று தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். மணமக்களை பார்த்த மற்ற வாக்காளர்கள் ஒருகணம் திகைத்தனர்.. பிறகுதான் ஓட்டு போட வந்திருந்திப்பதை அறிந்து மகிழ்ந்தனர்.

ஈர்ப்பு
அத்துடன் பூத்தில் இருந்த அனைவருமே மணமக்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். கல்யாணம் முடிந்த கொஞ்ச நேரத்திலேயே சென்று வாக்களித்த சம்பவம் அந்த பகுதி மக்களை ஈர்த்தது.

புதுமணத்தம்பதி
இதேபோல, ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி அருகே லக்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர். மாலை வாக்குப்பதிவு முடியும் கடைசி நேரத்தில், அதாவது 4.45 மணிக்கு ரினோடிக்லுஸ் - நிகிதிதா என்ற புதுமணத்தம்பதியும், மாலையும் கழுத்துமாக வேகமாக வந்தனர்.. இதில் மணமகனுக்கு மட்டும் ஓட்டு இருந்தால், அதை செலுத்திவிட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications