கிளைச்செயலாளர் முதல் அமைச்சர் வரை ஸ்ரீவைகுண்டம் அதிமுக வேட்பாளர் எஸ்.பி சண்முகநாதன் பயோடேட்டா
ஸ்ரீ வைகுண்டம் தொகுதியின் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் சிட்டிங் எம்எல்ஏ சண்முகநாதன். 2001ஆம் ஆண்டு முதல் இந்த தொகுதியில் போட்டியிடும் சண்முகநாதன் 5வது முறையாக இந்த தொகுதியில் களமிறங்குகிறார்.
தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் சட்டசபைத் தொகுதியின் அ.தி.மு.க எம்.எல்.ஏவாக இருப்பவர் எஸ்.பி.சண்முகநாதன். நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் மீண்டும் வேட்பாளராக களமிறங்குகிறார். கிளைச்செயலாளராக அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்து மாவட்டச் செயலாளராகவும் கைத்தறித்துறை, இந்துசமய அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை, பால்வளத்துறை ஆகிய துறைகளில் முன்னாள் அமைச்சராகவும் பதவி வகித்தவர். இவர் கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.
பாரம்பரிய வைத்தியர் குடும்பத்தை சேர்ந்தவர் எஸ்.பி.சண்முகநாதன், வயது 66. ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு உட்பட்ட பண்டாரவிளை தான் இவரது சொந்த கிராமம். 1975ல் அதிமுக உறுப்பினராக சேர்ந்தார். அரசியலில் காலடி எடுத்து வைக்கும் முன்பு, 9வது வகுப்பு படித்து விட்டு தந்தை செய்து வந்த பாரம்பரிய வைத்தியர் தொழிலை தான் சண்முகநாதனும் செய்து வந்தார்.

எம்ஜிஆரால் 1977ல் பண்டாரவிளை கிளை செயலாளராக நியமிக்கப்பட்டார். 1986ஆம் ஆண்டில் பெருங்குளம் பேரூராட்சி தலைவரானார். 1995, 99ஆம் ஆண்டுகளில் ஸ்ரீவைகுண்டம் அதிமுக ஒன்றிய செயலாளராக நியமிக்கப்பட்டார். 2000 ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளராக நியமிக்கப்பட்டார்.
2001ஆம் ஆண்டில் சட்டசபை தேர்தலின் போது ஸ்ரீவைகுண்டம் சட்டசபை தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு விண்ணப்பித்தார். வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனவுடன் அரசு போக்குவரத்து கழக பஸ்சில் ஏறி சென்னைக்கு சென்றவருக்கு அமைச்சர் பதவியும் கிடைத்தது.
கைத்தறி துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால் 9 மாதங்களிலேயே அமைச்சர் பதவியையும், மாவட்ட செயலாளர் பதவியையும் இழந்தார். இவரது இடத்தை பிடித்த அனிதா ராதாகிருஷ்ணன் அமைச்சர் பதவியையும், மாவட்ட செயலாளர் பதவியையும் தட்டிச் சென்றார். அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுகவில் இருக்கும் வரை தூத்துக்குடி மாவட்ட அதிமுகவில் அவரது கையே ஒங்கியிருந்தது.
2006ல் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் சீட் கிடைத்த போதிலும் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி செல்வராஜிடம் தோல்வியை தழுவினார். 2009ஆம் ஆண்டில் அனிதா ராதாகிருஷ்ணன் திமுகவிற்கு சென்றதால் பலவீனமாக இருந்த அதிமுகவிற்கு மாவட்ட செயலாளராக எஸ்.பி.சண்முகநாதன் நியமிக்கப்பட்டார்.
2011ஆம் ஆண்டில் மீண்டும் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.பி.சண்முகநாதனுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. அதிமுக பதவியேற்ற உடனேயே இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பதவியும் கிடைத்தது.
உள்கட்சி விவகாரங்களால் 6 மாதத்தில் அமைச்சர் பதவியும், மாவட்ட செயலாளர் பதவியும் பறிபோனது.
செல்லப்பாண்டியனின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதால் 2013 ஆம் ஆண்டு மீண்டும் எஸ்.பி.சண்முகநாதன் சுற்றுலா துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். மாவட்ட செயலாளர் பதவியும் சண்முகநாதனை தேடி வந்தது.
2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் எஸ்.பி சண்முகநாதன் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. வெற்றி பெற்ற உடன் பால்வளத்துறை அமைச்சராக பதவியேற்றார். இரண்டே மாதங்களில் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. சிட்டிங் எம்எல்ஏவான எஸ்.பி சண்முகநாதன் மீண்டும் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு விருப்பமனு அளித்தார். முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் எஸ்.பி சண்முகநாதன் பெயர் வெளியாகியுள்ளது.
எம்ஜிஆர் காலத்தில் கிளைச்செயலாளராக அரசியலை தொடங்கிய எஸ்.பி சண்முகநாதன், 43 ஆண்டுகாலமாக அதிமுகவில் எத்தனையோ உட்கட்சி பூசல்களையும் தாண்டி நிலைத்து அரசியல் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஒன் மேன் ஆர்மி.. நானே செலவெல்லாம் பார்த்துக்கிறேன்.. அமித் ஷாவிடம் சொன்ன எடப்பாடி.. என்னாச்சு? -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
எடப்பாடியை சந்தித்ததுமே மனம் மாறிய பூவை ஜெகன்மூர்த்தி.. அதிமுக கூட்டணியில் தான் போட்டி என அறிவிப்பு -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications