திருச்செந்தூர் கோயிலில் குடமுழுக்கு! பக்தர்கள் அரோகரா முழக்கம்.. ட்ரோன்கள் மூலம் புனித நீர் தெளிப்பு
தூத்துக்குடி: முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக கருதப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று, 15 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை காண சுமார் 10 லட்சம் பக்தர்கள் வரை குவிந்துள்ளனர். பக்தர்களின் அரோகரா முழக்கத்திற்கு இடையில் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றிருக்கிறது.
அதிகாலை 6.15 மணிக்கு தமிழில் வேத மந்திரங்கள் ஓத, கும்பாபிஷேகம் தொடங்கியது. ஒரே நேரத்தில் ராஜகோபுரம் கும்ப கலசங்களுக்கும், மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் என அனைத்து பரிவார மூர்த்தி சுவாமிகளுக்கும் புனித நீர் கொண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

குடமுழுக்கை காண பக்தர்கள் ஒரே இடத்தில் குவிந்தால் நெரிசல் ஏற்படும் என்பதால், ஆங்காங்கே எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் நெரிசல் தவிர்க்கப்பட்டிருக்கிறது.
குடமுழுக்கை காண சுமார் 10 லட்சம் பக்தர்கள் குவிந்துள்ளனர். அவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறையினர் சிறப்பாக செய்துள்ளனர். காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் காவல்துறையினர் பக்தர்களின் பாதுகாப்புக்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்திருக்கின்றனர். குறிப்பாக சுழலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட 3 ரோந்து கார்களும், ஜபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட 10 பைக்குகளும் பக்தர்கள் மத்தியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கின்றன.












Click it and Unblock the Notifications