தென் தமிழகத்தின் நுழைவு வாயிலாக தூத்துக்குடி நகரம் மாறும்.. மத்திய அமைச்சர ராம் மோகன் நாயுடு
தூத்துக்குடி: தென் தமிழகத்தின் நுழைவு வாயிலாக தூத்துக்குடி நகரம் மாறும் என்று மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறினார். தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள விமான நிலையம் மூலமாக தென் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பெறுகும். விரிவாக்கப்பட்ட விமான நிலையம் மூலம் மிகப்பெரிய விமானங்கள் தரையிறங்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக தமிழில் தனது உரையை தொடங்கிய ராம் மோகன் நாயுடு தமிழ் மொழி அருமையானது. எனக்கு பிடிக்கும் என்றும் கூறினார்.
பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக தமிழகம் வருகை தந்துள்ளார். வெளிநாடு சுற்றுப்பயணம் சென்றிருந்த பிரதமர் மோடி இறுதியாக மாலத்தீவு சென்றிருந்தார். தொடர்ந்து இன்று இரவு மாலத்தீவில் இருந்து தூத்துக்குடிக்கு தனி விமான மூலமாக வந்தடைந்தார். தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் ரவி, மத்திய அமைச்சர் எல் முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கனிமொழி, கீதா ஜீவன் உள்ளிட்டோ பங்கேற்றனர். பிரதமர் மோடிக்கு வள்ளுவர் கோட்டம் மாதிரியை தங்கம் தென்னரசு பரிசாக வழங்கினார். வ உ சியின் கனவை பிரதமர் மோடி நிறைவேற்றுவார் எனவும், ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி வருகை தந்துள்ளார் என்றும் கூறினார். மேலும் முன்பு இந்தியா வெளிநாடுகளிடம் கடன் வாங்கிக்கொண்டிருந்தது.
ஆனால் இப்போது வெளிநாடுகளுக்கு கடன் கொடுத்து வருகிறது என்றும் ரூ.12 லட்சம் கோடியை தமிழகத்திற்கு மோடி வழங்கியுள்ளார் என்றும் எல் முருகன் தெரிவித்தார். இதேபோல் மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தமிழில் பேசி உரையை தொடங்கினார். தமிழ் மொழி அருமையானது என்றும், தமிழ் மொழி எனக்கு பிடிக்கும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் தமிழகத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி திட்டங்களுடன் மோடி வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ராம் மோகன் நாயுடு கூறியதாவது:- விரிவாக்கப்பட்ட விமான முனையம் மூலம் பெரிய விமானங்கள் தரையிறங்க முடியும். தமிழகத்தின் எச்லுமை வாய்ந்த கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் விமான நிலையம் வடிவைமைக்கப்பட்டுள்லது. விமான நிலையம் மூலம் தென் தமிழகத்தில் சுற்றுலா துறை வளர்ச்சி அடையும். தென் தமிழகத்தின் நுழைவு வயிலாக தூத்துக்குடி மாறும். தூத்துக்குடி விரிவாக்கப்பட்ட விமான நிலையத்தால் பெரிய விமானங்கள் தரையிறங்க முடியும். சுற்றுலா, பொருளாதாரத்தின் நுழைவு வாயிலாக தூத்துக்குடி விமான நிலையம் அமைகிறது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications