அந்த 2 மணி நேரம்.. டென்ஷன் ஆன ஏ.சி. சண்முகம்.. நல்ல முடிவு சொல்லி கூல் ஆக்கிய தேர்தல் அதிகாரி!
ஏசி சண்முகத்தின் வேட்பு மனு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
வேலூர்: திடீரென வேட்பு மனு பரிசீலனை நிறுத்தப்பட்டுள்ளது என்று சொன்னதும், தூக்கி வாரிப்போட்டது ஏசி சண்முகத்துக்கு மட்டும் இல்லை. அதிமுகவுக்கும்தான்! 2 மணி நேர டென்ஷனுக்கு பின்னர்தான் நிம்மதி பெருமூச்சு ஏற்பட்டது.
கடந்த முறை தேர்தலில் நல்ல வாக்கு சதவீதத்தை பெற்றிருந்தார். திமுகவை 3-ம் இடத்தைதான் பிடிக்க வைத்து, 2-ம் இடத்துக்கு முன்னேறினார். போதாக்குறைக்கு பணத்துக்கு பஞ்சமே இல்லை.

செல்வாக்கு
துரைமுருகனின் செல்வாக்கு, அரசியல் பலம், பண பலம், வன்னியர் ஓட்டுக்கள் என எவ்வளவுதான் களத்தில் இறக்கப்பட்டாலும் எப்படியும் ஏசிஎஸ் வெற்றி பெற்று விடுவார் என்றுதான் அதிமுக இவரை இரட்டை இலை சின்னத்தில் நிறுத்தியது.

கேள்வி
ஆனால் இப்போது வேட்பு மனு தாக்கல் தொகுதியில் முடிவடைந்த நிலையில், அதற்கான பரிசீலனை நடந்தது. அப்போது ஏசி சண்முகத்தின் வேட்பு மனு தாக்கல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இல்லாமல் எப்படி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியும் என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

நிறுத்தி வைப்பு
இதையே எதிர்க்கட்சிகளும் கேள்வி கேட்டதால் ஏ.சி.சண்முகத்தின் வேட்புமனு பரிசீலனையை தேர்தல் அதிகாரி நிறுத்தி வைத்துள்ளார் என்றார்கள். இருப்பினும் உரிய கடிதத்தை அவர் அளித்தால் வேட்பு மனு ஏற்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

சோதனை
தொடர்ந்து ஏசிஎஸ்-க்கு சோதனை மேல் சோதனை வந்து கொண்டே இருந்தது. தேர்தல் தினத்தன்றுகூட, 4 தொகுதி இடைத்தேர்தலின்போது வேலூருக்கு தேர்தல் நடத்தினால் நல்லா இருக்கும் என்று குலுங்கி அழுதவாறே சொன்னார். அதிமுகவுக்கென தேர்தல் நிதியும் அப்போதே தனியாக கொடுத்திருந்தார். இதைதவிர தொகுதிகள் விட்டதை பிடிக்க முடியாமல் தவித்து கொண்டுள்ளார்.

பரபரப்பு
2 நாளைக்கு முன்னாடி பிரச்சாரம் செய்யும்போதுகூட, இந்த தேர்தலையாவது ஒழுங்கா நடத்த விடுங்கள் என்று திமுகவினருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இப்போது, தேர்தல் அதிகாரியே இப்படி ஒரு விளக்கத்தை தந்ததால், ஏசி எஸ் தரப்பு ஷாக் ஆனது. கடைசியில், ஏ.சி.சண்முகம் அதிமுகவில் இணைந்ததற்கான உறுப்பினர் அட்டையை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக பிரதிநிதிகள் ஒப்படைத்தனர். அதன்பிறகுதான் வேட்பு மனு ஏற்கப்பட்டது. உறுப்பினர் அட்டை ஒப்படைத்த, அந்த 2 மணி நேரத்திற்குள் வேலூர் அதிமுகவே அலறி விட்டது!
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications