சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரும் பணி.. அதிகாரிகள் நேரில் ஆய்வு
வேலூர்: வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வருவது குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
பருவமழை சராசரி அளவை காட்டிலும் குறைவாக பெய்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள 89 அணைகள், 14,098 ஏரிகள் நீரின்றி வறண்டுள்ளது. இதனால், அணைகளில் இருந்து குடிநீர் தேவைக்கு கூட தண்ணீர் விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில், தண்ணீர் பிரச்சனை பெரும் பிரச்சனையாக உள்ளது.

சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 850 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில், 550 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். அதே நேரம், ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வர ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஜோலார்பேட்டை அருகேயிலுள்ள பாசம்பேட்டை ரயில்வே கேட் அருகே சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ரயில் மூலம் குடிநீர் கொண்டு செல்வதற்கான சாத்தியக் கூறுகள், தினமும் எவ்வளவு தண்ணீர் எடுத்து செல்ல முடியும் ஆகியவை குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது. மேலும், மேட்டுசக்கறகுப்பம் நீர்தேக்க தெட்டியில் இருந்து ரயில் நிலையத்திற்கு நேரடியாக தண்ணீர் குழாய் புதைப்பது குறித்தும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
சென்னை கலங்கரை விளக்கம் அருகே ஆழ்துளை கிணறு மூலம் அமைக்கப்பட்ட 5 அடிபம்புகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னை கடற்கரை பகுதியில் முதல்முறையாக அடி பம்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கடற்கரை அருகே இருந்தாலும், குடிநீர் சுவையாக இருப்பதாக நொச்சிக்குப்பம் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications