சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரும் பணி.. அதிகாரிகள் நேரில் ஆய்வு
வேலூர்: வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வருவது குறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
பருவமழை சராசரி அளவை காட்டிலும் குறைவாக பெய்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள 89 அணைகள், 14,098 ஏரிகள் நீரின்றி வறண்டுள்ளது. இதனால், அணைகளில் இருந்து குடிநீர் தேவைக்கு கூட தண்ணீர் விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில், தண்ணீர் பிரச்சனை பெரும் பிரச்சனையாக உள்ளது.

சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 850 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில், 550 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். அதே நேரம், ஜோலார்பேட்டையிலிருந்து ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வர ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஜோலார்பேட்டை அருகேயிலுள்ள பாசம்பேட்டை ரயில்வே கேட் அருகே சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ரயில் மூலம் குடிநீர் கொண்டு செல்வதற்கான சாத்தியக் கூறுகள், தினமும் எவ்வளவு தண்ணீர் எடுத்து செல்ல முடியும் ஆகியவை குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது. மேலும், மேட்டுசக்கறகுப்பம் நீர்தேக்க தெட்டியில் இருந்து ரயில் நிலையத்திற்கு நேரடியாக தண்ணீர் குழாய் புதைப்பது குறித்தும் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
சென்னை கலங்கரை விளக்கம் அருகே ஆழ்துளை கிணறு மூலம் அமைக்கப்பட்ட 5 அடிபம்புகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னை கடற்கரை பகுதியில் முதல்முறையாக அடி பம்புகள் அமைக்கப்பட்டுள்ளன. கடற்கரை அருகே இருந்தாலும், குடிநீர் சுவையாக இருப்பதாக நொச்சிக்குப்பம் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
-
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications