வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பூரா ரவுடி பசங்களும் பாஜகவில்! இதைச் செய்தால் தான் நமக்கு மரியாதை! பாடம் நடத்திய துரைமுருகன்!

Google Oneindia Tamil News

வேலூர்: பூரா ரவுடி பசங்களும் பாஜகவில் தான் இருப்பதாகவும் ஊரில் தகராறு செய்பவர்களை எல்லாம் பாஜக பொறுக்கி எடுத்து சேர்த்துக் கொள்வதாகவும் அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 40க்கு 40 தொகுதிகளை வென்றால் தான் நம்மை பார்த்து அதிகாரிகளும் பயப்படுவார்கள், மத்திய அரசும் பயப்படும் என நிர்வாகிகளிடம் தெரிவித்திருக்கிறார்.

பணத் திமிங்கலத்தை எதிர்த்து நாம் போராட வேண்டியது இருக்கும் என்றும் எதற்கும் திமுகவினர் தயாராக இருந்துகொள்ள வேண்டும் எனவும் பாடம் நடத்தியிருக்கிறார் துரைமுருகன்.

நாம் எதிர்க்கப்போவது பெரிய பிசாசு.. 2 மாசம் தான் டைம்.. உழைக்கலைனா வெளிய போ.. கடுகடுத்த துரைமுருகன்!நாம் எதிர்க்கப்போவது பெரிய பிசாசு.. 2 மாசம் தான் டைம்.. உழைக்கலைனா வெளிய போ.. கடுகடுத்த துரைமுருகன்!

துரைமுருகன் பேச்சு

துரைமுருகன் பேச்சு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு நிர்வாகிகளையும், தொண்டர்களையும் தயார் படுத்தும் வகையில் பேசினார். பணபலத்தாலும், அதிகாரப் பலத்தாலும் தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருவதாக கூறிய அமைச்சர் துரைமுருகன், ஊருக்குள் தகராறு செய்யக்கூடிய நபர்களை எல்லாம் பாஜக பொறுக்கி எடுத்து சேர்த்து வருவதாக விமர்சித்தார்.

ரவுடிகள்

ரவுடிகள்

பூரா ரவுடி பசங்களும் பாஜகவில் தான் இருக்கிறார்கள் என சாடிய துரைமுருகன், எது எப்படி வந்தாலும் சரி நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க திமுகவினர் ஒவ்வொருவரும் தயாராக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். பாஜக, அதிமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் பூத் கமிட்டியை ஜாக்கிரதையாக கவனமுடன் அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், 40க்கு 40 தொகுதிகளையும் திமுக வெல்ல வேண்டும் என உறுதி காட்டினார்.

40க்கு 40 தொகுதிகள்

40க்கு 40 தொகுதிகள்

40க்கு 40 தொகுதிகளை வென்றால் தான் நம்மை பார்த்து அதிகாரிகளும் பயப்படுவார்கள், மத்திய அரசும் பயப்படும் என நிர்வாகிகளிடம் துரைமுருகன் தெரிவித்திருக்கிறார். பணத் திமிங்கலத்தை எதிர்த்து நாம் போராட வேண்டியது இருக்கும் என்று கூறிய துரைமுருகன், எதையும் சந்திக்க திமுகவினர் தயாராக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

துரைமுருகன் ஒப்புதல்

துரைமுருகன் ஒப்புதல்

இதனிடையே தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருவதை துரைமுருகனே ஒப்புக் கொண்டது போல் அவரது பேச்சு அமைந்திருப்பது தான் இதில் குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். அதிமுகவை பற்றி பேசுவார் என்று பார்த்தால் அந்தக் கட்சியை காட்டிலும் பாஜகவை பற்றித் தான் அவர் அதிகம் பேசினார் என்பது கவனிக்கத்தக்கது.


English summary
Duraimurugan said that only if we win 40 out of 40 seats in Tamil Nadu in the coming parliamentary elections, the officials will be afraid of us and the central government will also be afraid.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X