கலப்புத் திருமணம் செய்தால் ரூ.2.5 லட்சம்.. முதியோர், பெண்களுக்கு உதவி எண்கள் அறிமுகம்.. மத்திய அரசு
வேலூர் : வேலூரில் பெண்கள் மற்றும் முதியவர்கள் உதவி பெறும் வகையில் தொலைபேசி எண்களை மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அறிமுகம் செய்து வைத்தார்.
சாதி, மதத்தை மறந்து கலப்புத் திருமணம் செய்வோருக்கு மத்திய அரசு 2.5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாகவும் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார். முதியவர்கள் விழிப்புணர்வு உதவி எண் 14567, பெண்கள் விழிப்புணர்வு பெற உதவி எண் 181 வேலூரில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

முதியோர் உதவி பெற 14567
வேலூர் மாவட்டத்தில் முதியவர்கள் விழிப்புணர்வு மற்றும் உதவி பெறுவதற்கான எண் 14567 மற்றும் பெண்கள் விழிப்புணர்வுக்காக 181 என்ற பிரத்யேக தொலைபேசி எண்களை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தொடங்கி வைத்தார். முதியவர்கள் 14567 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு, ஓய்வூதியம், சட்டம் தொடர்பான சந்தேகங்கள், ஆதரவு போன்ற வழிகாட்டுதல்களை இலவசமாக பெற முடியும். இதுமட்டுமின்றி துஷ்பிரயோக பிரச்சினைகள் இருந்தாலும் இந்த உதவி மையத்தை நாடலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பெண்கள் உதவி பெற 181
அதேபோல 181 உதவி எண் மூலம் பெண்கள் தங்களுக்கு எதிரான குற்றங்கள், குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை, பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்கவும், அரசின் திட்டங்கள், பள்ளி, கல்லூரிகளில் வழங்கப்படும் உதவித் தொகை உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்து கொள்ளவும் பயன்படும். இத்திட்டங்களை வேலூர் மாவட்டத்தில் மத்திய சமூக நலத்துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தொடங்கி வைத்து பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

முத்ரா யோஜனா திட்டத்தில் பயன்
தமிழ்நாட்டில் முத்ரா யோஜனா திட்டத்தில் 2015ம் ஆண்டு முதல் இதுநாள் வரை 3.60 கோடி மக்கள் பயன் அடைந்துள்ளனர். 2016 முதல் இதுவரை 29 லட்சம் குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும், அதேபோல் கிராமப்புறங்களில் 5.60 லட்சம் பேருக்கும், நகரங்களில் 4.42 லட்சம் பேருக்கு வீடுகள் கட்டப்பட்டுள்ளது என்றும் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.

சாதி மறுப்பு திருமணம் செய்தால் நிதி
மத்திய அரசு கலப்புத் திருமணங்களை ஊக்குவிக்கும் வகையில் அந்த தம்பதிக்கு 2.5 லட்சம் நிதி உதவி வழங்கி உதவி செய்வதாக குறிப்பிட்ட மத்திய இணை அமைச்சர், இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு 1.75 லட்சம் கலப்புத் திருமணங்கள் நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தார். சிறுபான்மையினருக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படுவதாக குறிப்பிட்ட ராம்தாஸ் அத்வாலே, தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications