Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் சிறப்பு கல்விக்கடன் முகாம்.. 16ம் தேதி மிஸ் பண்ணிடாதீங்க

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்குபெறும் சிறப்பு கல்விக்கடன் முகாம் வருகிற 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காட்பாடி வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. முகாமில் இ-சேவை மையம் அமைக்கப்படுகிறது. இதில் வேலூர் மாவட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று கல்விக்கடன் பெறலாம் என வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி அறிவித்துள்ளார்.

தமிழக அரசுகல்லூரிகள் தொடங்கிய பின்னர், மாணவர்களின் உயர்கல்விக்குத் தேவையான கல்விக் கடன்களை உடனடியாகப் பெற்றுத் தருவதற்காக, சிறப்பு கல்வி கடன் முகாம்களை அமைக்கிறது. மாணவர்கள் வங்கிகளுக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பிப்பதில் ஏற்படும் காலதாமதம் மற்றும் சிக்கல்களைத் தவிர்த்து, ஒரே இடத்தில் அனைத்து வங்கிகளின் பிரதிநிதிகளையும் ஒருங்கிணைத்து, விரைந்து கடன் வழங்க விரும்புகிறது. இந்த திட்டத்தை தமிழக அரசு கல்வியாண்டின் தொடக்கத்தில் நடத்துகிறது. பரவலாக எல்லா மாவட்டங்களிலும் நடக்கும்.

Vellore Special Education Loan Camp to be held on 16th September at VIT University

தமிழ்நாட்டில் உள்ள மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களும், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், பொறியியல், சட்டம் உள்ளிட்ட அனைத்துப் பட்டப்படிப்பு மாணவர்களும் முகாமிற்கு நேராக சென்று கல்விக்கடன் பெற முடியும். கல்விக்கடன் கிடைக்காமல் அவதிப்படும் மாணவ மாணவிகள் முகாமில் சென்றால் உடனே கடன் பெற முடியும். அரசு அதற்காக ஏற்பாடுகளை செய்கிறது. அந்த வகையில் வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் சிறப்பு கல்வி கடன் முகாம் வரும் செப்டம்பர் 16ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "தமிழ்நாட்டில் உள்ள தொழில்நுட்பம், மருத்துவம், மருத்துவம் சார்ந்த கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் மற்றும் 10, 12-ம் வகுப்பு முடித்து உயர்கல்வியை தொடர முடியாமல் உள்ள மாணவர்கள் கல்விக்கடன் பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை தீர்த்து கல்விக்கடன் பெறுவதை எளிதாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அனைத்து வங்கி அலுவலர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து சிறப்பு கல்விக்கடன் முகாம் நடத்தி வருகிறது.

அதன்படி 2-வது கட்டமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்குபெறும் சிறப்பு கல்விக்கடன் முகாம் வருகிற 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காட்பாடி வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. முகாமில் இ-சேவை மையம் அமைக்கப்படுகிறது.

எனவே வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் தங்களின் மதிப்பெண் பட்டியல், பான்கார்டு, ஆதார் கார்டு, சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், கல்லூரி உறுதி சான்றிதழ் மற்றும் கல்விக்கடன் தேவை விவரம் ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசின் சிறப்பு கல்விக்கடன் வழங்கும் முகாமை சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்" இவ்வாறு கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+