செயல்படாத ஏடிஎம்களுக்கு பூஜை நடத்தி சவ ஊர்வலம்... புதுவையில் நூதனப் போராட்டம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரியில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இயங்காத ஏடிஎம்களுக்கு பூஜை செய்து, சவ ஊர்வலம் நடத்தி நூதன முறையில் போராட்டம் நடத்தினர். இதில், 50க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிற்சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், புதுச்சேரியில் உள்ள சுமார் 360 ஏடிஎம்களில் 60 மட்டுமே தற்போது வேலை செய்வதாகவும், மீதமுள்ள 300 ஏடிஎம்கள் வேலை செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினர். எனவே மத்திய அரசுக்கு எதிரான தங்களது எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் இவ்வாறு வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்துவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications