புதுவை: வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்த கிரண்பேடி, நாராயணசாமி - வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் முதல்வர் நாராயணசாமி வீராம்பட்டினத்தில் உள்ள கோவில் திருவிழாவில் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
புதுச்சேரியை அடுத்த வீராம்பட்டினத்தில் உள்ள பிரசித்தி பெற்ற செங்கழுநீரம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பெடி, முதல்வர் நாராயணசாமி ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, புதுச்சேரி சட்டசபை துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications