For Quick Alerts
For Daily Alerts
Just In
காலந்தாழ்த்தாமல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்... விவசாய சங்கங்கள் கோரிக்கை- வீடியோ
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாநிலத் துணைத்தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். இதில், ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், வெட்டியனுப்பிய கரும்புகளுக்கான நிலுவைத் தொகையை தனியார் மற்றும் கூட்டுறவு கரும்பு ஆலைகளிடமிருந்து மத்திய, மாநில அரசுகள் பெற்றுத்தர வேண்டும், காலந்தாழ்த்தாமல் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதற்கு தீர்வு காணப்படாவிட்டால் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்துவது என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
Comments
krishnagiri cauvery issue cauvery management board oneindia tamil videos கிருஷ்ணகிரி விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் காவிரி மேலாண்மை வாரியம் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
In Krishnagiri the farmers have urged the central government to form Cauvery management board immediately.
Story first published: Friday, November 4, 2016, 10:52 [IST]