கிருஷ்ணகிரி: தவறான சிகிச்சையால் பச்சிளம் குழந்தை பலி.. மருத்துவமனை முற்றுகை - வீடியோ
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மருத்துவர்கள் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தை உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மகேஸ்வரி என்பவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தையின் உடல் வழக்கத்திற்கு மாறாக நீல நிறத்தில் இருந்ததாம். பின்னர் கிருஷ்ணகிரி மருத்துவமனையில் இருந்த குழந்தையை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.












Click it and Unblock the Notifications