பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து 3 வயது குழந்தை பலி.. விழுப்புரத்தில் சோகம்! துடிதுடித்த பெற்றோர்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில், எல் கே ஜி படித்து வந்த மூன்றரை வயது சிறுமி பள்ளி செப்டிக் டேங்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மூன்றரை வயது மாணவி லியா பிரியதர்சினி என்ற குழந்தை எல்கேஜி சி வகுப்பில் பயின்று வந்தார். இந்த வகுப்பறையில் இருந்து சுமார் 10 அடி தூரத்தில் தான் கழிவறை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கழிவறை அருகேயே செப்டிக் டேங்க் உள்ளது. இந்த செப்டிக் டேங்கை சுற்றி வேலை அமைக்கப்பட்டு இருந்தது. செப்டிக் டேங்க் மேலே ஒரு இரும்பு தகரத்தினை கொண்டு மூடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று பள்ளி வளாகத்தில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுமி லியா பிரியதர்ஷினி எதிர்பாராத விதமாக கழிவு நீர் தொட்டி அருகே சென்றுள்ளார்.
அப்போது அந்த தொட்டியில் மூடப்பட்டிருந்த இரும்பு தகரம் உடைந்து சிறுமி உள்ளே விழுந்துள்ளார். இதையடுத்து மற்ற சிறுமிகள் ஆசிரியர்களிடம் தகவல் கூற உடனடியாக ஆசிரியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் உடனடியாக தீயணைப்பு துறை அதிகாரிகள் அங்கு வந்து குழந்தை லியா பிரியதர்ஷினியை மீட்டனர். ஆனால் சிறுமி ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். மேலும் உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பள்ளி அதிகாரிகளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பள்ளியில் எல்கேஜி படிக்கும் மூன்றரை வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. குழந்தையின் பெற்றோர் உடலை பார்த்து கதறி அழுதனர்.
முன்னதாக பள்ளிக்கும் மதியத்திற்கு பிறகு விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து போலீசார் கழிவுநீர் தொட்டி இருக்கும் இடத்தில் ஆய்வு செய்து வருகிறார்கள். மூன்றரை வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் அலட்சியமாக செயல்பட்டதே காரணம் என்று பெற்றோர்கள் கூறி வருகிறார்கள்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications