"கணவரை" விட்டு காதலனோடு போலீசில் நிலையத்தில் இளம் பெண் தஞ்சம்.. விசாரணையில் ட்விஸ்ட்
விழுப்புரம்: செஞ்சி அருகே, சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட நிலையில், 18 வயது பூர்த்தியானதையடுத்து வீட்டை விட்டு வெளியேறி அந்த இளம்பெண் தனது காதலனை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் குழந்தை திருமணம் செய்து வைத்த பெற்றோரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
இளம்பெண் தனது கணவரின் குடும்பத்தாருடன் செல்வதாக கூறிய நிலையில் பெண் காதல் கணவனுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

5 ஆண்டு காதல்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை ஒட்டியுள்ள கொளப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஜான்சிராணி எனும் இளம் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் தனது காதல் கணவனுடன் தஞ்சம் புகுந்துள்ளார். பிரச்னை குறித்து விசாரித்த காவல்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, ஜான்சி ராணியும் பழைய கருவாட்சி கிராமத்தை சேர்ந்த ஞானமுத்துவும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரம் ஜான்சிராணியின் வீட்டிற்கு தெரிய வரவே அவர்கள் கட்டாய திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

கட்டாய திருமணம்
ஆனால் அப்போது ஜான்சிராணி சிறுமி. இருப்பினும் கிளின்டன் எனும் நபருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனையடுத்து 18 வயது பூர்த்தியாகும் வரை எந்த பிரச்னையும் இன்றி இருவரும் இருந்துள்ளனர். ஆனால் 18 வயது பூர்த்தியான நிலையில் அப்பெண் தனது காதலனுடன் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் வீட்டு தரப்பிலிருந்து இந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியது.

தஞ்சம்
இதனையடுத்து பெண்ணை தேடும் பணியில் பெண் வீட்டார் ஈடுபட்டனர். எங்கு தேடியும் பெண் கிடைக்காத நிலையில், காவல் நிலையத்திலிருந்து பெண் வீட்டாருக்கு அழைப்பு வந்துள்ளது. அழைப்பின் பேரில் சென்று பார்த்தபோது அங்கு தனது மகளும் அவளது காதலனும் திருமணமான நிலையில் இருந்துள்ளனர். இதனை கண்டு ஆத்திரமடைந்த பெண் வீட்டார் ஜான்சிராணியை சரமாரியாக தாக்க தொடங்கியுள்ளனர். உடனடியாக காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி எச்சரித்துள்ளனர்.

காதல்...காதல்
ஆனால் சமாதானமாகாத பெண் வீட்டார் தனது மகளை தங்களுடன் அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஜான்சிராணி இதனை ஏற்க மறுத்துவிட்டார். காவல்துறையினர் கேட்டதற்கு "நான் எனது கணவர் ஞானமுத்துவின் குடும்பத்தாருடன் சென்றுவிடுகிறேன்" என ஜான்சிராணி கூறியுள்ளார். இதனையடுத்து பெண்ணை காதல் கணவனுடன் காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். மேலும், சிறுமியாக இருந்த ஜான்சிராணிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த ஜான்சிராணியின் பெற்றோரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications