Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லீலாவை காதலித்தேன்.. இந்திராவை கட்டி வைத்தனர்.. கொன்றேன், எரித்தேன்.. கம்பி எண்ணும் ரிடையர்ட் எச்எம்

மனைவியை எரித்து கொன்ற கணவர் கைதாகி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: "லீலாவை காதலித்தேன்.. ஆனால், இந்திராவை என் தலையில் கட்டி வைத்துவிட்டார்கள்.. லீலாவுடன் என்னை நிம்மதியாக வாழ இந்திரா விடவில்லை.. அதனால்தான் அடித்து கொன்றேன்.. பழைய துணிகளை அள்ளி போட்டு சடலத்தை எரித்தேன்" என்று முதல் மனைவியை எரித்து கொன்ற ஓய்வு பெற்ற ஹெச்.எம். வாக்குமூலம் தந்துள்ளார்.

விழுப்புரம் சுதாகர் நகர் பகுதியில் வசிப்பவர் நடராஜன். திருக்கோவிலூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஹெச்.எம்.ஆக வேலை பார்த்தவர்.. 2 வருடங்களுக்கு முன்பு ஓய்வும் பெற்றவர். இவருக்கு திருக்கோவிலூரை சேர்ந்த லீலா என்ற மனைவியும் உண்டு.

இந்திராவுக்கு இப்போது 56 வயதாகிறது.. சுதாகர் நகர் பகுதியில் காய்கறி கடை வைத்து நடத்தி வந்தார். இதை தவிர வட்டிக்கும் பணம் தந்து வந்தார்.

இந்திரா

இந்திரா

இந்நிலையில் கடந்த வாரம், நடராஜன் திருக்கோவிலூரில் உள்ள லீலாவை பார்க்க சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது இந்திரா பிணமாக எரிந்த நிலையில் கிடந்தார். அவரது பின்பக்க தலையில் ரத்தக்காயம் இருந்தது. கழுத்தில் இருந்த நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தன.. அதிர்ச்சி அடைந்த நடராஜன் இதுகுறித்து போலீசில் புகார் செய்யவும், விசாரணை ஆரம்பமானது.

வட்டிக்கு பணம்

வட்டிக்கு பணம்

இந்திரா வட்டிக்கு பணம் கொடுத்து வந்ததால் அந்த பிரச்சனையில் யாராவது கொலை செய்தார்களா, நகைக்காக கொலை நடந்ததா என்கின்ற விசாரணைகள் ஒரு பக்கம் இருந்தாலும், நடராஜன் மீதே போலீசாருக்கு நிறைய சந்தேகங்கள் இருந்தன. அதனால், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது.

வாக்குமூலம்

வாக்குமூலம்

போலீசார் சந்தேகப்பட்ட படியே நடராஜன்தான் மனைவியை கொன்றது தெரியவந்துள்ளது. போலீசில் நடராஜன் சொன்ன வாக்குமூலம் இதுதான்: "எனக்கு படிக்கும்போதே லீலா மீது காதல் இருந்தது.. ஆனால், வீட்டில் இந்திராவை கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து வைத்துவிட்டனர்.. எனக்கு இந்திராவை பிடிக்கவே இல்லை.. எப்பவும் தகராறுதான்.. அதனால் நான் வீட்டுக்கு தெரியாமல், லீலாவை திருப்பதிக்கு கூட்டி சென்று தாலி கட்டி கொண்டேன். இது இந்திராவுக்கு தெரிந்துவிட்டது.. தகராறு செய்தாள்.

தற்கொலை

தற்கொலை

எனக்கும் இந்திராவுக்கும் பிறந்த ஸ்ரீராம் சரியாக படிக்கமாட்டான்.. அவனை நான் ஒருநாள் அசிங்கமாக திட்டவும் தற்கொலை செய்து கொண்டான்.. இதனால் என் மீது இந்திராவுக்கு இன்னும் கோபம் அதிகமானது. நான் அடிக்கடிதிருக்கோவிலூரில் உள்ள லீலாவை பார்க்க போவேன்.. அங்கேயும் பல நாள் தங்கிவிடுவேன்.. இதற்கும் இந்திரா தொந்தரவு செய்தாள்.

ரத்தம்

ரத்தம்

இந்திரா உயிருடன் இருந்தால் லீலாவுடன் நிம்மதியாக வாழ முடியாது என்பதால் கொலை செய்ய முடிவு செய்தேன்.. சம்பவத்தன்றும் வீட்டுக்கு வந்தேன்.. வழக்கம்போல் தகராறு நடந்தது.. இந்திரா தூங்க போய்விட்டாள்.. இரவு 2 மணியளவில் தூங்கி கொண்டிருந்த இந்திராவின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கினேன். மண்டையில் ரத்தம் கொட்டி இந்திரா இறந்துவிட்டாள்.. பிறகு வீட்டில் இருந்த துணிகளை அள்ளி கொண்டு வந்து இந்திராவின் உடல் மீது போட்டு, மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார்.

கைது

கைது

இது ஒரு திருட்டு சம்பவம் போல் தெரியவேண்டும் என்பதற்காக வீட்டிலிருந்த 8 பவுன் நகையை எடுத்துக் கொண்டு தப்பியுள்ளார். விடிந்ததும், மனைவியை கொலை செய்துவிட்டதாக நாடகமாடி உள்ளார். இதையடுத்து, போலீசார் நடராஜனை கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+