பாஸ்தா சாப்பிட்டதால் இளம்பெண் பலி..? அதிர்ச்சி சம்பவம்.. ஹோட்டலில் அதிரடி ரெய்டு.. தீவிர விசாரணை!
செஞ்சி : விழுப்புரம் அருகே பாஸ்தா சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் உயிரிழந்ததற்கு காரணம் பாஸ்தா தானா என தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி பலியான சம்பவத்தால் ஏற்பட்டிருந்த பீதியே இன்னும் அகல்வதற்குள், குழந்தைகளின் ஃபேவரிட் உணவான பாஸ்தாவிலும் பிரச்சனை ஏற்பட்டிருப்பது பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பலியான இளம்பெண் பாஸ்தா சாப்பிட்ட கடையில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு மாதிரிகளை சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

பாஸ்தா சாப்பிட்ட இளம்பெண்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள அன்னியூரைச் சேர்ந்தவர் பிரதீபா (22). இவர் அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரை காதலித்து, கடந்த மாதம் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் நண்பர்களுடன் சுற்றுலா சென்ற பிரதீபா - விஜயகுமார் தம்பதியர் இரவு, திருவாமாத்துார் விழுப்புரம் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் பாஸ்தா சாப்பிட்டுவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

திடீர் பலி
வீட்டுக்குச் சென்றபின் இரவு 11.30 மணியளவில் பிரதீபா வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, பதறிப்போன குடும்பத்தினர் பிரதீபாவை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் பிரதீபா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர்.

சாவில் சந்தேகம்
பிரதீபாவின் தந்தை பழனிவேல், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கஞ்சனூர் காவல் நிலையத்தில் குவிந்து புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஆர்.டி.ஓ தலைமையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஹோட்டலில் ஆய்வு
பாஸ்தா சாப்பிட்டதால் இளம்பெண் உயிரிழந்ததாக சமூக வளைதளங்களில் தகவல் பரவியதை தொடர்ந்து, விழுப்புரம் புறவழிச்சாலையில், பிரதீபா சாப்பிட்ட ஹோட்டலில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, ஃப்ரீசரில் வைத்திருந்த வேகவைத்த சேமியாவை கைப்பற்றி அழித்தனர். மேலும், வெள்ளை நிற பாஸ்தாவை உணவு மாதிரி எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

ரிப்போர்ட் வந்த பிறகே
போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த பிரதீபாவுக்கு இதய நோய் இருந்ததால் அவர் மாத்திரை எடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது. எனவே பிரதீபாவின் உடற்கூறாய்வு முடிவுகள் வந்த பின்னரே, அவர் பாஸ்தா சாப்பிட்டதால் உயிரிழந்தாரா அல்லது இருதய பாதிப்பு காரணமாக உயிரிழந்தாரா என்பது தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஷவர்மா
சமீபத்தில், கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி ஒருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளிலும் ஷவர்மா கடைகளில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. இந்நிலையில், விழுப்புரம் அருகே பாஸ்தா சாப்பிட்ட இளம்பெண் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications