மிட்நைட்டில்.. புது மனைவியை காணோமாம்.. விருந்துக்கு போன இடத்தில் அக்கப்போரு.. இது விருதுநகர் டுவிஸ்ட்
விருதுநகர்: தூக்கம் கலைந்து கண்விழித்து பார்த்தால், பக்கத்தில் படுத்திருந்த மனைவியை காணவில்லையாம்.. இதனால் பதறிப்போய்விட்டார் புதுமாப்பிள்ளை.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ளது தென்கரை என்ற பகுதி. 21 வயதாகிறது.. இவருக்கு ராஜபாளையத்தை சேர்ந்த 22 வயது இளைஞருடன், கடந்த மாதம் 21ம் தேதி திருமணம் நடைபெற்றது.

திருமணம்: இரு வீட்டிலுமே பெற்றோர்கள் ஏற்பாடு செய்த திருமணம் இதுவாகும்.. எனவே, உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ இந்த திருமணம் ஜரூராக நடந்து முடிந்தது..
இந்நிலையில், புதுமணத்தம்பதி இருவரும், மாரீஸ்வரியின் பெற்றோர் வீட்டுக்கு, மறு வீட்டு விருந்துக்காக சென்றிருக்கிறார்கள்.. சம்பவத்தன்று இரவு, விருந்து சாப்பிட்டுவிட்டு, தூங்குவதற்காக சென்றார்கள்.. அப்போது நள்ளிரவில் தூக்கம் கலைந்து, மாப்பிள்ளை கண்விழித்து பார்த்தபோது, பக்கத்தில் படுத்திருந்த மனைவியை காணவில்லையாம்.
அதிர்ச்சி: இதனால் அதிர்ச்சியடைந்த மாப்பிள்ளை, மாரீஸ்வரியை வீடு முழுவதும் தேடினார்... பிறகு உறவினர்களுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி, அவர்களையும் தேட சொன்னார்.. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும்கூட, மாரீஸ்வரியை எங்கும் கிடைக்கவில்லை.,. இதனால், பதறிப்போன மாப்பிள்ளை, போலீசில் புகார் தந்தார்.
போலீசாரும் இது தொடர்பான விசாரணையை கையில் எடுத்தபோதுதான், தென்கரையைச் சேர்ந்த சுப்பையா பாண்டியன் என்ற இளைஞர் மீது சந்தேகம் விழுந்தது.. சுப்பையா பாண்டியனும், மாரீஸ்வரியும் ஏற்கனவே உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.. எனவே, காதலனுடன் மாரீஸ்வரி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில், அவரை தேடும்பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
சோகம்: மாரீஸ்வரியின் காதல் கதையை கேட்டதுமே, மாப்பிள்ளை அதிர்ந்து போய்விட்டார். கல்யாணத்துக்கு முன்பு, மாரீஸ்வரி என்னுடன் போனில் பேசும்போது நல்லாதான் பேசினார்.. எதுவும் நடக்காதது போல பேசினாரா? இப்போது என்னுடைய எதிர்கால கனவுகளையே சிதைத்து விட்டாரே" என்று நொந்து போய் சொல்கிறாராம் மாப்பிள்ளை.












Click it and Unblock the Notifications