ஈரக்குலையே நடுங்கிருச்சு.. சதுரகிரி மலையில் குபுகுபுன்னு எரிந்த காட்டுத்தீ.. 3,000 பக்தர்கள் தவிப்பு
விருதுநகர்: சதுரகிரி மலையில் ஏற்பட்டு இருக்கும் பெரும் காட்டுத் தீ காரணமாக கோயிலுக்கு சென்ற 3000 க்கும் அதிகமான பக்தர்கள் சிக்கத் தவிக்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியை அடுத்து உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது சதுரகிரி. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5 ஆயிரம் அடி உயரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக வனப் பகுதியில் இந்த சதுரகிரி மலை அமைந்து உள்ளது.

இங்குள்ள சுந்தரமகாலிங்கம் மற்றும் சந்தனமகாலிங்கம் கோயில்களுக்கு அமாவாசையை முன்னிட்டு சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் கோயிலுக்கு செல்லும் மலைப் பாதையில் நேற்று மாலை 6 மணியளவில் திடீரென பெரும் காட்டுத் தீ பரவியது.
இந்த காட்டுத் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினருடன் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு கருதி பக்தர்கள் மலையில் இருந்து கீழே இறங்கவும் வனத்துறை தடை விதித்து இருக்கிறது. இதன் காரணமாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கீழே இறங்க முடியாமல் சிக்கித் தவித்து வருகிறார்கள். அவர்கள் கோயிலிலேயே தங்க வைக்கப்பட்டு உள்ளார்கள்.
இந்த காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் 30க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தீ விபத்தால் பக்தர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரம் தீயை முழுமையாக அணைத்த பிறகு சதுரகிரி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட பகுதி மதுரை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட சாப்டூர் பீட் நம்பர் 5 என்ற வனப்பகுதி என்று கூறப்படுகிறது. மலை உச்சியில் ஏற்பட்ட காட்டுத்தீயை மலை அடிவாரத்தில் இருந்த பக்தர்களும் பார்த்ததாக தெரிவித்து உள்ளார்கள். சதுரகிரி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த இரு மாதங்களாக மலை இல்லாததாலேயே இந்த காட்டுத்தீ ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மழை இல்லாததால் காரணத்தால் காட்டாறுகள், ஓடைகளில் நீர்வரத்து இன்றி இந்த வனப்பகுதி முழுவதும் வறண்டு காணப்பட்டது. மலைப்பகுதியில் வீசிய பலத்த காற்றால் இலைகள், மூங்கில்கள் உரசி தீப்பற்றி இருக்கலாம் காட்டுத் தீ வேகமாக பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மாலை 6 மணியளவில் காட்டுத் தீ ஏற்படுவதற்கு முன்பே பக்தர்கள் பலர் மலை அடிவாரத்துக்கு சென்று விட்டதாகவும், இதனால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாகவும் பக்தர்கள் தெரிவித்து உள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications