எனக்கே விபூதி அடிச்சீட்டீங்கல்ல! பாஜக லோக்கல் கையிடம் ஆட்டைய போட்ட மாவட்ட தலைகள்! பரபர விருதுநகர்!
விருதுநகர் : விருதுநகரில் அரசு வேலை வாங்கி தருவதாக 9 லட்சத்தை மோடி செய்த பாஜக நிர்வாகி கலையரசன் என்பவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்துள்ள நிலையில்,புகார் கொடுத்ததும் பாஜக நிர்வாகிதான் என்பது லோக்கல் அரசியலில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
என்னதான் ஆச்சு தமிழக பாஜகவுக்கு என்பது போல் கட்சியின் மேல்மட்ட தலைவர்கள் தொடங்கி கட்சியின் கடைநிலை தொண்டர்கள் வரை அடுத்தடுத்து ஏதாவது ஒரு சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். கேடி ராகவன், டெய்சி ராணி - சூர்யா சிவா சர்ச்சை, காயத்ரி ரகுராம் நீக்கம், என அடுத்தடுத்து ஏதாவது பிரச்சினைகள் அடிக்கடி எழுகிறது.
இது ஒரு புறம் என்றால் மாவட்ட அளவிலான தலைவர்களும் அடுத்தடுத்து பல வழக்குகள் சிக்கி வருகின்றனர். குறிப்பாக மோசடி உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கி கைதாவது என அடுத்தடுத்து வெளிவரும் செய்திகளால் கட்சி தலைமை கடும் அதிருப்தியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பாஜக நிர்வாகி
இந்நிலையில் விருதுநகரில் அரசு வேலை வாங்கி தருவதாக 9 லட்சத்தை மோடி செய்த பாஜக நிர்வாகி கலையரசன் என்பவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் பாஜகவில் சிவகாசி மாநாகராட்சியில் துணைத்தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய இரண்டு மகன்களுக்கு ரயில்வே மற்றும் துறைமுகத்தில் வேலை வாங்க வேண்டுமென நினைத்துள்ளார்.

9 லட்சம் மோசடி
இதனையடுத்து இருவருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி பாஜகவின் விருதுநகர் மேற்கு மாவட்ட துணை செயலாளர் கலையரசன் மற்றும் பாஜகவின் விருதுநகர் மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ் குமார் ஆகியோர் பாண்டியனிடம் 2017ம் ஆண்டு 9 லட்சம் வாங்கி உள்ளனர். இந்த நிலையில் தன்னுடைய இரண்டு மகன்களில் ஒருவருக்கு ரயில்வே துறையிலும் தன்னுடைய இளைய மகனுக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறிய படி அரசு வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்து உள்ளனர்

பவுன்ஸ் செக்
இந்த நிலையில் அரசு வேலைக்கு கொடுத்த பணத்தை பாண்டியன் பாஜகவின் மேற்கு மாவட்ட துணை செயலாளர் கலையரசனிடம் திருப்பி கேட்டு வந்து உள்ளார். கலையரசன் பாண்டியனுக்கு கொடுக்க வேண்டிய பணத்துக்கு வங்கி காசோலை கொடுத்து உள்ளார். அதனை பாண்டியன் வங்கியில் செலுத்திய போது வங்கியில் பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்து உள்ளது.

கைது
இந்த நிலையில் தான் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 9 லட்சத்தை மோசடி செய்து விட்டதாக கூறி விருதுநகர் பாஜக மேற்கு மாவட்ட துணை செயலாளர் கலையரசன் மற்றும் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் பாண்டியன் புகார் அளித்தார். பாண்டியன் கொடுத்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில் பாஜகவின் விருதுநகர் மேற்கு மாவட்ட துணை செயலாளர் கலையரசனை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications