முதல் முறை.. ஐநா சபையில் ரஷ்யாவுக்கு எதிராக ஓட்டளித்த இந்தியா! உக்ரைன் போர் விவகாரத்தில் என்னாச்சு?
வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 6 மாதங்கள் கடந்த நிலையில் முதல் முறையாக ஐநா சபையில் ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா ஓட்டளித்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
உக்ரைன்-ரஷ்யா ஆகியவை அண்டை நாடுகளாக உள்ளன. ஒரு காலத்தில் உக்ரைன் என்பது ஒருங்கிணைந்த சோவியத் யூனியனாக இருந்தது. இந்நிலையில் தான் தற்போது தனித்தனி நாடுகளாக ரஷ்யா, உக்ரைன் உள்ளன.
இந்நிலையில் தான் எல்லை தொடர்பான விவகாரத்தில் ரஷ்யா-உக்ரைன் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வந்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் நடவடிக்கையை துவங்கியது.

ரஷ்யா மீது பொருளாதார தடைகள்
இதனை அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக எதிர்த்துள்ளன. போர் நடவடிக்கையை கைவிடும்படி அந்நாடுகள் ரஷ்யாவிடம் வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அதனை கேட்கவில்லை. இதையடுத்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. மேலும் ஐநா சபையில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்ற அந்த நாடுகள் முயன்று வருகின்றன.

நடுநிலை வகிக்கும் இந்தியா
இருப்பினும் இந்தியா தொடர்ந்து நடுநிலை வகித்து வருகிறது. போர் நடவடிக்கையை கைவிட்டு உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மேலும் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை இந்தியா விதிக்கவில்லை. அதோடு தொடர்ந்து ரஷ்யாவுடன் வர்த்தக ரீதியாக இந்தியா தொடர்பில் உள்ளது. அதோடு ஐநா சபையில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானங்கள் மீதான ஓட்டெடுப்பை இந்தியா தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதன்மூலம் ஐநா சபையிலும் ரஷ்யாவுக்கு இந்தியா சப்போர்ட்டாக உள்ளது.

இந்தியா ஓட்டளிப்பு
இந்நிலையில் தான் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் முதல் முறையாக ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா ஓட்டளித்துள்ளது. அதாவது உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் காணொலி வாயிலாக உரையாற்ற அழைப்பு விடுக்கும் விஷயத்தில் ஓட்டெடுப்பு நடந்தது. இதில் இந்தியா ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்தது. இந்த கவுன்சிலில் வரும் டிசம்பர் மாதம் வரை 2 ஆண்டுகளாக இந்தியா தற்காலிக உறுப்பினராக அங்கம் வகிக்கும் நிலையில் இன்று ரஷ்யாவுக்கு எதிராக ஓட்டளிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 15 நாடுகள் உறுப்பினராக உள்ள நிலையில் இன்று ரஷ்யாவுக்கு எதிராக 13 நாடுகள் ஓட்டளித்தன. இந்த ஓட்டெடுப்பின்போது ரஷ்யா எதிராக வாக்களித்த நிலையில் சீனா புறக்கணித்தது.

ரஷ்யாவுக்கு எதிரானது அல்ல
இதுபற்றி இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், "எனது பார்வையில் நாங்கள் ரஷ்யாவுக்கு எதிராக ஓட்டளிக்கவில்லை. விளாடிமிர் ஜெலன்ஸ்கி காணொலி வாயிலாக உரையாற்றுவதற்கான முன்மொழிவு கொண்டு வரப்பட்டது. அதற்கு நாங்கள் ஆதரவு மட்டுமே அளித்தோம். விளாடிமிர் ஜெலன்ஸ்கி 3-வது முறையாக ஐநாவில் பேச உள்ளார் என்று நினைக்கிறேன். ஏற்கனவே இருமுறை இதுபோல அவர் உரையாற்றி இருக்கிறார்'' என்றார்.
-
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications