“நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிறது.. ஈரான் என சொல்லிக்கொள்ள எதுவும் இருக்காது!” - டிரம்ப் மிரட்டல்!
வாஷிங்டன்: ஈரான்-அமெரிக்கா இடையே தற்போது தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் நாங்கள் முன் வைக்கும் டிமாண்டை ஏற்கவில்லை எனில், ஈரான் என்று சொல்லிக்கொள்ள எதுவும் இருக்காது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ட்ரம்ப் தனது 'டிரூத் சோஷியல்' சமூக வலைதளப் பக்கத்தில், ஈரானுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், "ஈரானுக்கான நேரம் வேகமாக முடிந்து கொண்டிருக்கிறது. அவர்கள் உடனே பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். இல்லையெனில் அவர்களைப் பின்நாட்களில் அடையாளம் காண எதுவும் மிஞ்சாது" என்று அதிரடியாகக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவை பொறுத்தவரை, அவர்கள் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். மொத்தம் 5 நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.
1. ஈரான் தன்னிடம் உள்ள 400 கிலோகிராம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும்.
2. ஈரான் ஒரே ஒரு அணுசக்தி நிலையத்தை மட்டுமே இயக்க வேண்டும்.
3. போர் இழப்பீடு கேட்கும் கோரிக்கையை ஈரான் கைவிட வேண்டும்.
4. முடக்கப்பட்ட ஈரானிய சர்வதேச சொத்துக்கள் தொடர்ந்து முடக்கப்படியேதான் இருக்கும் என்பதை ஏற்க வேண்டும்.
5. பேச்சுவார்த்தைகள் முழுமையாக முடிந்த பிறகே அனைத்து முனைகளிலும் போர் நிறுத்தப்படும்.












Click it and Unblock the Notifications