இந்தியாவை அழைக்க முடிவு.. ஜி7 மாநாட்டை செப்டம்பருக்கு ஒத்தி வைத்தார் அதிபர் டொனால்ட் டிரம்ப்
வாஷிங்டன்: ஜூன் மாதம் இறுதியில் நடைபெறும் ஜி7 மாநாட்டை செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
Recommended Video
ஜி7 நாடுகள் அமைப்பில் மிகப் பெரிய பொருளாதாரத்தை கொண்ட வளர்ச்சி அடைந்த நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்த நாடுகளின் அதிபர்கள், தலைவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை ஒன்றுகூடி ஆலோசனை நடத்தி பொருளாதாரம், வர்த்தகம், வியாபாரம் உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசுவர். இந்த மாநாட்டை இந்த அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள் மாறி மாறி நடத்தும்.

ஒத்திவைப்பு
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மாநாட்டை அமெரிக்க நடத்த வேண்டும். இந்த மாநாடுகள் ஜூன் மாதம் 10 முதல் 12-ஆம் தேதி வரை அமெரிக்காவில் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மாநாட்டை ஒத்திவைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

ஸ்பேஸ் எக்ஸ்
மேலும் இதை செப்டம்பர் மாதத்தில் நடத்த முடிவு செய்துள்ளார். இந்த தகவலை புளோரிடாவில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் லாஞ்ச் நிகழ்வை பார்த்துவிட்டு வாஷிங்டன் திரும்பிய போது நிருபர்களிடம் அவர் தெரிவித்தார். மேலும் இந்த மாநாட்டில் இந்தியா, ரஷ்யா, தென்கொரியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்களையும் அழைக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒத்திவைப்பு
ஜி7-மாநாடு அதன் தற்போதைய நிலையில் மிகவும் காலாவதியான நாடுகளின் குழு என்றும் தெரிவித்த அவர், உலகில் நடந்து வருவனவற்றை முறையாக பிரதிபலிக்காது என்பதால் ஜி7 மாநாட்டை ஒத்திவைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறப்பு விருந்தினர்கள்
கொரோனா வைரஸ் தொற்று குறையாத இந்த நேரத்தில் ஜி7 மாநாட்டில் பங்கேற்க மாட்டேன் என ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல், டிரம்பின் அழைப்பை ஏற்க மறுத்தது குறிப்பிடத்தக்கது. ஜி7 மாநாட்டை நடத்தும் நாடுகள் ஓரிரு நாடுகளின் தலைவர்களையும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்க முடியும்.

அதிபர்
அந்த வகையில் கடந்த ஆண்டு நடந்த ஜி7 மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெர்கான் பிரதமர் நரேந்திர மோடியை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார். அது போல் இந்த ஆண்டு ஜி7 மாநாட்டை நடத்தும் அமெரிக்க அதிபர் டிரம்ப், சில நாடுகளின் தலைவர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைக்கலாம். அதனால் இந்தியா, ரஷ்யா, தென்கொரியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்களையும் அழைக்க அவர் முடிவு செய்துள்ளார்.
-
அதிபர் பதவியை இழக்கும் டிரம்ப்? களத்தில் இறங்கிய அந்த 70 பேர் + மாஜி அமெரிக்க உளவு துறை தலைவர்! -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications