கொரோனாவை தெரிந்தே பரப்பியிருந்தால்.. அதிக விளைவுகளை சீனா சந்திக்க நேரிடும்- டிரம்ப் கோபம்
வாஷிங்டன்: வுகான் லேபிலிருந்து கொரோனா எனும் தொற்றுநோய் சீனாவுக்கு தெரிந்தே பரப்பப்பட்டது என்றால் அந்த நாடு அதிக விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Recommended Video
உலகில் உள்ள 180-க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. இவை பொருளாதார பாதிப்பையும் உயிரிழப்பையும் சந்தித்து வருகின்றன.
இந்த நிலையில் சீனாவின் வுகான் பரிசோதனை கூடத்திலிருந்து இந்த வைரஸ் பரவியதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. வைரஸ் பரவியது குறித்து டொனால்ட் டிரம்ப் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

சீனா செய்யவில்லை
இதுகுறித்து அவர் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சனிக்கிழமை சந்தித்தார். அப்போது அவரிடம் சீனா இந்த வைரஸை வேண்டுமென்றே பரப்பியதா என கேட்டனர். அதற்கு அவர் கூறுகையில் வைரஸ் பரவியதை சீனா ஆரம்ப கட்டத்திலேயே தடுத்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்யவில்லை. இதனால் ஒட்டுமொத்த உலகமே தற்போது பாதிக்கப்பட்டு வருகிறது.

வேண்டுமென்றே
தற்போது கொரோனா குறித்து நடத்தப்பட்டு வரும் விசாரணையில் சீனாவுக்கே தெரியாமல் அந்த வைரஸ் தவறாக வெளியே வந்துவிட்டிருந்தால் தவறு, தவறு என்றாகிவிடும். ஒரு வேளை சீனாவுக்கு தெரிந்தே வேண்டுமென்றே பரப்பியதாக கண்டுபிடிக்கப்பட்டால் அதிக விளைவுகளை அந்த நாடு சந்திக்க நேரிடும்.

சந்தேகம்
சீனாவையும் மீறி தவறுதலாக அந்த வைரஸ் வெளியே வந்துவிட்டதா அல்லது வேண்டுமென்றே வெளியே பரப்பப்பட்டதா.. இவை இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. அவர்களும் வைரஸ் பரவியது குறித்து விசாரணை நடத்துவதாக கூறியுள்ளார். அவர்களது விசாரணை முடிவுகள் என்ன வருகிறது என்பதை பார்ப்போம். நாங்களும் விசாரித்து வருகிறோம். அந்த நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 0.33 சதவீதமாக உள்ளதாக கூறுவதே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா பதிலடி
முன்னதாக சீன வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் ஜாவ் லிஜியன் கூறுகையில் தங்கள் நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவத்தினர்தான் இந்த வைரஸை பரப்பினர் என்றார். இதற்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா அதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்றது. மேலும் கொரோனா வைரஸை சீன வைரஸ் என டிரம்ப் அழைத்தார். இவ்வாறாக இரு நாடுகளுக்கிடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications