அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்- டொனால்ட் டிரம்ப் ட்வீட்
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கிவிட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளிலேயே கொரோனாவால் மிக மோசமான பேரழிவை எதிர்கொண்டிருப்பது அமெரிக்காதான். கொரோனாவால் அமெரிக்காவில் இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் மரணம் அடைந்துவிட்டனர்.

நாள்தோறும் 2 லட்சத்தை தொடுகிறது கொரோனா பாதிப்பு. இந்த நிலையில் அமெரிக்காவில் ஃபைசர் (Pfizer) நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்கா ஒப்புதல் கொடுத்தது.
இதனையடுத்து அமெரிக்காவில் இன்று செவிலியர் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. Long Island Jewish Medical Center-ல் பணிபுரியும் சாண்ட்ரா லிண்ட்சே என்ற செவிலியர்தான் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கிவிட்டது என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications