அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்- டொனால்ட் டிரம்ப் ட்வீட்
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கிவிட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளிலேயே கொரோனாவால் மிக மோசமான பேரழிவை எதிர்கொண்டிருப்பது அமெரிக்காதான். கொரோனாவால் அமெரிக்காவில் இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் மரணம் அடைந்துவிட்டனர்.
நாள்தோறும் 2 லட்சத்தை தொடுகிறது கொரோனா பாதிப்பு. இந்த நிலையில் அமெரிக்காவில் ஃபைசர் (Pfizer) நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்கா ஒப்புதல் கொடுத்தது.
ரஷ்யாவின் ஸ்புட்னிக்V தடுப்பு மருந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதில் 91.4% பாதுகாப்பானது என அறிவிப்பு
இதனையடுத்து அமெரிக்காவில் இன்று செவிலியர் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. Long Island Jewish Medical Center-ல் பணிபுரியும் சாண்ட்ரா லிண்ட்சே என்ற செவிலியர்தான் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கிவிட்டது என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.