"மனிதர்களே ஒரு வேற்று கிரகவாசிகள் தான்" பறக்கும் தட்டில் பூமிக்கு வந்தனர்.. அப்பல்லோ விஞ்ஞானி!
வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வேற்று கிரகவாசிகள் தொடர்பாக ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில், அப்பல்லோ திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானி, மனிதர்களே ஒரு வேற்று கிரகவாசிகள் தான் என்றும், வேறு கிரகத்தில் இருந்து பறக்கும் தட்டு மூலம் மனிதர்கள் பூமிக்கு வந்தனர் என்று தெரிவித்துள்ளார்.
வேற்று கிரக வாசிகள் குறித்து அவ்வப்போது வியக்கும் படியாக பல தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கும்.
ஹாலிவுட் படங்களை மிஞ்சும் வகையில் மேலை நாடுகளில் சிலர் வேற்று கிரகவாசிகளை பார்த்தாக கூறி பரபரப்பை ஏற்படுத்துவதெல்லாம் சர்வ சாதாரணமான விஷயமாக உள்ளது.

வேற்று கிரகவாசிகள்
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவும் வேற்று கிரகவாசிகள் வெறும் கட்டுக்கதையா? இல்லை உண்மையிலேயே இருக்கிறார்களா? என்று கண்டறிய ஒருபக்கம் ஆய்வை நடத்தி கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் கூட வேற்று கிரகவாசியை காரில் பார்த்ததாக கூகுள் எர்த் யூசர் ஒருவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அதேபோல், பறக்கும் தட்டை பார்த்ததாகவும் சில விமானிகள் கூட கூறியதாக செய்திகள் வெளியாகி வேற்று கிரகவாசிகள் பற்றிய நமது ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்து இருக்கும்.

மனிதர்களே ஒரு வேற்று கிரகவாசிகள்
நம்மை போலவே வேறு கிரகத்திலும் கண்டிப்பாக ஏதேனும் உயிர்கள் வாழும் என்று ஒரு தரப்பினர் திட்டவட்டமாக கூறி வருகின்றனர். ஆனால், இதையெல்லாம் வெறும் கட்டுக்கதைகள் தான் அதற்கான சாத்தியமே இல்லை என்று சிலர் கூறும் தகவலாக இருக்கிறது. இந்த விவாதங்கள் நீண்ட காலமே சென்று கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நிலவுக்கு மனிதனை அனுப்பிய அப்பல்லோ திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானி, மனிதர்களே ஒரு வேற்று கிரகவாசிகள் தான் என ஒரே போடாக போட்டுள்ளார்.

ஓடம் மூலம் பூமிக்கு வந்துள்ளனர்
வேறு ஒரு கிரகத்தில் இருந்து மனிதர்கள் பூமிக்கு ஒரு ஓடம் (ஷிப்) மூலம் பூமிக்கு வந்து, நாகரீக வாழ்க்கை முறையை தொடங்கியிருக்கலாம் என்று சொல்லி அதிரவைத்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ''நாமே ஒரு வேற்றுக்கிரகவாசிதான். ஆனால் வேற்றுக்கிரகவாசிகள் வேறு யாரோ என்று நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். எங்கிருந்தோ வந்தவர்கள் நாம் தான். ஏனென்றால் யாராவது உயிர் பிழைக்க வேண்டும் என்பதற்காக சிறிய விண்கலத்தில் ஏறி இங்கு வந்து தரையிறங்கி இருக்கின்றனர். அதன் பிறகு இங்கு நாகரீக சமூகத்தை தொடங்கியிருக்கிறார்கள்" என்றார்

2020-ஆம் அண்டு
இந்த தகவலை அல் வோர்டன் என்ற அந்த விஞ்ஞானி இப்போது சொல்லவில்லை. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2020 ஆம் ஆண்டு ஐடிவி குண்ட் மார்னிங் பிரிட்டன் என்ற தொலைக்காட்சியில் அளித்த பேட்டியின் போது இந்த வினோத தகவலை தெரிவித்து இருக்கிறார். இங்கிலாந்தை சேர்ந்த டெய்லி ஸ்டார் செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இறப்பதற்கு முன் கொடுத்த தகவல்
1971 ஆம் ஆண்டு நிலவுக்கு பயணம் மேற்கொண்ட அப்பல்லோ 15 குழுவில் அல் வோர்டன் இடம் பெற்றிருந்தார். விண்வெளியில் 12 நாட்கள் கழித்த இவர், நிலவின் பாறையில் வெறும் 39 நிமிடங்கள், 7 வினாடிகள் மட்டுமே இருந்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு இவர் இறந்துவிட்டார். இறப்பதற்கு முன்பு அவர் கொடுத்த தகவல்தான் தற்போது வெளியாகியிருக்கிறது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications